YouTurn

குஜராத் அரசு வரி வருவாயை அதிகரிக்க மதுவிலக்கு சட்டத்தை நீக்க முடிவு எனப் பரவும் போலிச் செய்தி !

குஜராத் அரசு வரி வருவாயை அதிகரிக்க மதுவிலக்கு சட்டத்தை நீக்க முடிவு எனப் பரவும் போலிச் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

வரி வருவாயை அதிகரிப்பதற்காக 62 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் மதுவிலக்கு சட்டத்தை முற்றிலுமாக நீக்க குஜராத் மாநில அரசு முடிவு – மாலை மலர்



Twitter Link | Archive Link

மதுவிலக்கு சட்டத்தை அகற்ற குஜராத் அரசு அதிரடி முடிவு. வரி வருவாயை அதிகரிப்பதற்காக 62 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் மதுவிலக்கு சட்டத்தை முற்றிலுமாக நீக்க குஜராத் மாநில அரசு முடிவு – தந்தி டிவி



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

மிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சொல்லும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, குஜராத்திற்கு சென்று முதலில் இதை சொல்ல வேண்டும் என்று கூறி மாலை மலர் மற்றும் தந்திடிவியின் நியூஸ் கார்டுகளை திமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அவ்வாறு பரவும் நியூஸ் கார்டுகளில் "வரி வருவாயை அதிகரிப்பதற்காக 62 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் மதுவிலக்கு சட்டத்தை முற்றிலுமாக நீக்க குஜராத் மாநில அரசு முடிவு" என்று இடம்பெற்றுள்ளது.



Archive Link:



Archive Link:

உண்மை என்ன ?

இதுகுறித்து மாலை மலரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், சமூக ஊடகங்களில் பரவி வரும் நியூஸ் கார்டு போன்று அவர்கள் எதையும் வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

மேற்கொண்டு தேடுகையில், கடந்த ஜூலை 19 அன்று "தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு." என்ற தலைப்பில் மாலை மலர் தன்னுடைய அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.



இந்த நியூஸ் கார்டும், சமூக வலைதளங்களில் பரவி வரும் நியூஸ் கார்டும் ஒரே மாதிரியாக உள்ளது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து "வரி வருவாயை அதிகரிப்பதற்காக 62 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் மதுவிலக்கு சட்டத்தை முற்றிலுமாக நீக்க குஜராத் மாநில அரசு முடிவு" என்று மாற்றியுள்ளனர்.



இதேபோன்று, தந்தி டிவியின் நியூஸ் கார்டு குறித்தும் அவர்களது பக்கத்தில் தேடியதில், அவ்வாறு எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

கடந்த ஜூலை 19 அன்று "தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு; வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தியது டாஸ்மாக் நிர்வாகம்; குவாட்டருக்கு ரூ10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ320 வரை உயர்த்தி டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு; மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு" என்று குறிப்பிட்டு நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளதை காண முடிந்தது.



எனவே பரவி வரும் தந்தி டிவியின் நியூஸ் கார்டும் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.



மேலும் படிக்க: சந்திரயான்-3 திட்டத்திற்காகப் பிரதமர் மோடி விரதம் இருப்பதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

மேலும் படிக்க: பழைய நாடாளுமன்ற கட்டிடம் அதானியிடம் ஒப்படைக்கப் போவதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

முடிவு:

நம் தேடலில், வரி வருவாயை அதிகரிக்க மதுவிலக்கு சட்டத்தை நீக்க குஜராத் அரசு முடிவு செய்ததாகப் பரவி வரும் தந்தி டிவி மற்றும் மாலை மலரின் நியூஸ் கார்டுகள் இரண்டும் போலியானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க