YouTurn

SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இடஒதுக்கீடு அவசியமில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக பரவும் நியூஸ் கார்ட்!

SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இடஒதுக்கீடு அவசியமில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக பரவும் நியூஸ் கார்ட்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் நியூஸ் கார்டில் “இந்திய மக்கள் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள் என கருதுவதால் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக உள்ளது. இதை எடிட் செய்து “SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியமில்லை“ என்று அவர் கூறியதாக தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

இவர் மட்டுமல்ல , இவரது கணவர் விஜயகாந்தும் இது போன்ற அடிப்படை புரிதலற்ற தட்டையான நிலைப்பாடுகள் கொண்டவர் தான். அவர் நல்லவர் , சோறுபோட்டார் என்பதெல்லாம் அரசியல் தலைவருக்கு தகுதியாகிவிடாது.

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக சன் நியூஸ் ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியமில்லை என்றும், இந்திய மக்கள் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள் என கருதுவதால் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என்றும், உடனே அனைத்து சாதி சான்றிதழ்களும் ரத்து செய்ய வேண்டு எனவும், சலுகைகள் அனைத்தும் திரும்ப பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


உண்மை என்ன? 

வைரலாகும் நியூஸ் கார்ட் சன் நியூஸ் ஊடகம் வெளியிட்டதாக பரவிய நிலையில், அவரகளது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். அப்போது செம்டம்பர் 6, 2025 அன்று இது தொடர்பான நியூஸ் கார்ட் ஒன்று வெளியாகியிருந்தது. அதில் “இந்திய மக்கள் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள் என கருதுவதால் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை. செங்கோட்டையனின் பேச்சு அதிமுகளின் உட்கட்சி விவகாரம் என்பதால் கருத்து கூற முடியாது- பிரேமலதா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


இதையடுத்து வைரலாகும் நியூஸ் கார்ட்டில் எஸ்.சி, எஸ்.டி என்று சாதிகளைக் குறிப்பிட்டு பிரேமலதா கருத்து கூறியதாக எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியானது.  


இதை உறுதி செய்ய, அவர் அளித்த பேட்டியை தேடிப் பார்த்தோம். புதிய தலைமுறை ஊடகத்தில், “ஜாதிவாரி கணக்கெடுப்பு.,பிரேமலதா பதில்” என்று  தலைப்பில் வெளியாகியிருந்தது. அதை பார்த்த போது, அந்த பேட்டியிலும் அவர் எங்கும் எஸ்.சி, எஸ்.டி குறித்து பேசியிருக்கவில்லை என்பதை அறியமுடிந்தது. 

image.png


முடிவு: 

எனவே, பரவி வரும் நியூஸ் கார்டில் “இந்திய மக்கள் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள் என கருதுவதால் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக உள்ளது. இதை எடிட் செய்து “SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியமில்லை“ என்று அவர் கூறியதாக தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க