YouTurn

சன் நியூஸ் பிரக்ஞானந்தா நெற்றியில் இருந்த திருநீற்றை போட்டோஷாப் மூலம் அழித்து செய்தி வெளியிட்டதாகப் பரவும் பொய்

சன் நியூஸ் பிரக்ஞானந்தா நெற்றியில் இருந்த திருநீற்றை  போட்டோஷாப் மூலம் அழித்து செய்தி வெளியிட்டதாகப் பரவும் பொய்

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

எப்போதும் நெற்றியில் திருநீற்றை அணிந்து இருக்கும் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முகத்தை பாழ் நெற்றியாக காட்டும் அளவிற்கு கீழ்த்தரமான போட்டோஷாப் வேலையை சன் நிறுவனம் செய்திருக்கிறது இப்படிப்பட்ட அல்பசந்தோஷத்திற்கு சொந்தக்காரர்கள்தான் திராவிட மாடலின் அதிபதிகள்


X link

விரிவான விளக்கம்

போலந்து நாட்டில் Grand Chess Tour தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஒரு போட்டியில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்சனை தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றது தொடர்பாக சன் நியூஸ் கடந்த 11ம் தேதி நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.



அதில், பயன்படுத்தப்பட்டுள்ள பிரக்ஞானந்தாவின் புகைப்படத்தில் அவரது நெற்றியில் இருந்த திருநீறு போட்டோஷோப் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த கல்யாண் ராமன் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்ன?

பரவக் கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இதே படம் 2023, ஆகஸ்ட் 24ம் தேதி மாக்னஸ் கார்ல்சன் - பிரக்ஞானந்தா தொடர்பாக ‘NDTV Sports’ இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் பிரக்ஞானந்தாவின் நெற்றியில் திருநீறு இல்லை.

 

மேற்கொண்டு பிரக்ஞானந்தாவின் புகைப்படங்கள் பலவற்றை இணையத்தில் தேடிப் பார்த்ததில் அவரது நெற்றியில் திருநீறு இல்லாத படங்களை காண முடிந்தது. அப்படி 2023, ஆகஸ்ட் மாதம் ’தி நியூஸ் மினிட்’ தளத்தில் வெளியான செய்தியில் உள்ள படத்திலும் பிரக்ஞானந்தாவின் நெற்றியில் திருநீறு இல்லை. 



’ChessBase India’ யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோவிலும் பிரக்ஞானந்தாவின் நெற்றியில் பொட்டு இல்லாமல் காண முடிகிறது. இப்படி திருநீறு வைத்துக் கொண்டும் வைக்காமலும் உள்ள பிரக்ஞானந்தாவின் பல புகைப்படங்கள் இணையத்தில் உள்ளன. ஆனால், சன் நியூஸ் வேண்டும் என்றே பிரக்ஞானந்தாவின் நெற்றியில் இருந்த திருநீற்றை போட்டோஷோப் மூலம் அழித்தது எனப் பொய் செய்தி பரப்பப்படுகிறது. 



மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினர் வாக்கிற்காக நெற்றியில் திருநீறு வைப்பதில்லை எனப் பரவும் பழைய படங்கள் !

பாஜகவின் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதும் போலி மதச்சார்பின்மைக்காக எடப்பாடி பழனிசாமி நெற்றியில் திருநீறு வைப்பது இல்லை எனப் பரப்பப்பட்டது. அவர் எப்போதும் போல திருநீறு வைக்கிறார் என முன்னரே யூடர்னில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ‘விபூதியை அழித்த பங்காளி கட்சி’ என அதிமுக குறித்துப் பொய் சொன்ன அண்ணாமலை!

நெற்றியில் திருநீறு வைப்பதும் அது வியர்வையில் அழிவதும் ஒரு இயல்பான நிகழ்வு. அத்தகைய இயல்பான நிகழ்வைக் கொண்டு வலதுசாரிகள் புதுப்புது அர்த்தங்களைக் கற்பிக்க முற்படுகின்றனர். 

முடிவு: 

பிரக்ஞானந்தா பற்றி செய்தி வெளியிட்ட சன் நியூஸ் அவரது நெற்றியில் இருந்த திருநீற்றை போட்டோஷோப் மூலம் அழித்துள்ளதாக பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமன் கூறியது தவறான தகவல். அப்புகைப்படம் 2023ம் ஆண்டு NDTV இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரக்ஞானந்தா நெற்றியில் பொட்டு இல்லாத படங்களும் இணையத்தில் உள்ளன.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க