YouTurn

தவெக ஆட்சியில் 4 டன் குட்கா பொருளை தீவைத்து எரித்த காவல்துறை என்று பரவும் பொய் செய்தி!

தவெக ஆட்சியில் 4 டன் குட்கா பொருளை தீவைத்து எரித்த காவல்துறை என்று பரவும் பொய் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, செஞ்சியில் ரூபாய் 1கோடி மதிப்புள்ள 4 டன் குட்கா பொருட்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. பரவி வரும் வீடியோ ஏப்ரல் 11 ஆம் தேதி, Gingee Fort என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவாக்கியிருந்ததை பார்க்கமுடிந்தது. அப்போது திமுக தான் ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பரவிய செய்தி

செஞ்சியில் ரூபாய் 1கோடி மதிப்புள்ள 4 டன் குட்கா பொருளை தீவைத்து எரித்த காவல்துறையினர் 

image.png

Archived Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மே 10 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். 

இந்நிலையில் பதவியேற்றக்கொண்ட அடுத்த நாளே செஞ்சியில் ரூபாய் 1கோடி மதிப்புள்ள 4 டன் குட்கா பொருளை தீவைத்து எரித்த காவல்துறையினர் என்று ஒரு வீடியோவை தவெகவினர் பரப்பி வருகின்றனர். 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Gingee Fort என்ற பேஸ்புக் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் ஏப்ரல் 11, 2026 அன்று செஞ்சியில் ரூபாய் 1 கோடி மதிப்புள்ள 4 டன் குட்கா பொருளை தீவைத்து எரித்த காவல்துறையினர் என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


இது குறித்து மேலும் தேடியப் போது Chithirai One Media என்ற டிஜிட்டல் ஊடகத்திலும், செஞ்சியில்  4 டன் குட்கா பொருளை காவல்துறையினர்  தீவைத்து எரித்தனர் என்று குறிப்பிட்டு ஏப்ரல் 14, 2026 அன்று இதே வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


இதிலிருந்து பரவி வரும் வீடியோ தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டது என்றும், இந்த சம்பவம் நடைபெறும் போது திமுக தான் ஆட்சியில் இருந்தது என்பதும் உறுதியானது. 


முடிவு: 

எனவே, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, செஞ்சியில் ரூபாய் 1கோடி மதிப்புள்ள 4 டன் குட்கா பொருட்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தவெகவினர் பரப்பும்  தகவல் தவறானது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க