YouTurn

அகமதாபாத்தில் விமானம் வெடித்த காட்சி என்று பரவும் டெல்லி குடியிருப்பு தீ விபத்து வீடியோ!

அகமதாபாத்தில் விமானம் வெடித்த காட்சி என்று பரவும் டெல்லி குடியிருப்பு தீ விபத்து வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஜூன் 10 அன்று புதுடெல்லியில் அமைந்துள்ள துவாரகா பகுதியில் உள்ள இரட்டை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது விபத்தில் இருந்து தப்பிக்க இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் முயற்சி செய்தனர். ஆனால் பால்கனியில் இருந்து குதித்த போது அவர்கள் உயிரிழந்தனர்.

பரவிய செய்தி

Air India விமான விபத்தில் மக்கள் பரிதாபமாக விமானத்திலிருந்து கீழே விழும் காட்சி..

image.png

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ’ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787- 8 டிரீம்லைனர்’ விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் இருந்த 242 பேரில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகலை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் இந்த விபத்தில் மக்கள் பரிதாபமாக விமானத்திலிருந்து கீழே விழும் காட்சி என்று வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது ”Apartment Fire | மளமளவெனப் பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு -தப்பிக்கக் கீழே குதித்த 3 உயிர்கள் பலி” என்ற தலைப்பில் ஜூன் 10, 2025 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில் டெல்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து என்றும், தீ விபத்திலிருந்து தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


தினத்தந்தி ஊடகத்தில் ”டெல்லி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து.. தப்பிக்கக் கீழே குதித்த 3 பேர் பலி” என்று இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் டெல்லி துவாரகா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்திலிருந்து தப்பிப்பதற்காக 7-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து யாஷ் யாதவ் மற்றும் அவரது 10 வயது மகன், மகள் ஆகிய 3 பேர் குதித்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று குறிப்பிட்டிருந்தது. 

அதே போல் தினகரன், Times Of India போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.


முடிவு : 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், டெல்லி அடுக்குமாடிக் குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் தப்பிக்கக் கீழே குதித்து உயிரிழந்த மூன்று பேரை, அகமதாபாத் விமான விபத்தோடு தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க