YouTurn

திருச்சியில் ஓட்டு கேட்டு போன அமைச்சர் அன்பில் மகேஷை மக்கள் விரட்டியதாகப் பரவும் தவறான செய்தி!

திருச்சியில் ஓட்டு கேட்டு போன அமைச்சர் அன்பில் மகேஷை மக்கள் விரட்டியதாகப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

திருச்சியில் ஓட்டு கேட்டு போன அமைச்சர் அன்பில் மகேசிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட விட்ட  மக்கள்!



X Link | Archive Link

விரிவான விளக்கம்

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 அன்று தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. இதனையடுத்து இந்தியா முழுவதுமே அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி திருச்சியில் ஓட்டு கேட்டு போன அமைச்சர் அன்பில் மகேஷை மக்கள் விரட்டியதாகக் கூறி 19 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் கூட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் அன்பில் மகேஷிற்கு எதிராக கூச்சலிடுவதையும் காண முடிகிறது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், 2024 மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படுவதற்கு முன்பிருந்தே, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.

Servai_media இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே வீடியோ மார்ச் 03 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் கூட்டத்தினர் பலரும், தங்களது சமூகத்தின் பெயரைச் சொல்லி, நாங்கள் சீட்டு கேட்கும் போது கசக்கிறதா? ஓட்டு கேட்க மட்டும் இனிக்கிறதா? என்பது போன்று சேர்ந்து கூச்சலிடுவதையும் தெளிவாகக் கேட்க முடிகிறது.




இதே போன்று, IND TAMIL 24x7 என்ற யூடியூப் பக்கத்திலும், பெரம்பலூரில் பெரும்பான்மையாக உள்ள ஒரு சமூகத்தினருக்கு, மக்களவை தேர்தலுக்காக திமுகவில் சீட்டு கொடுக்காததற்காக அன்பில் மகேஷ் மற்றும் கே.என்.நேரு கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் கூட்டமாக கோஷமிட்டனர் என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்ததையும் காண முடிந்தது. 


இதன் மூலம் இது திருச்சியில் அன்பில் மகேஷ் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. பெரம்பலூரில் மக்களவை தேர்தலுக்காக திமுக தரப்பிலிருந்து ஒரு குறிப்பிட்டு சமூகத்தினருக்கு சீட்டு ஒதுக்கபடாதது தொடர்பாக மக்கள் கூச்சலிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. 

மேலும் படிக்க: தினமலரை நடுநிலை பத்திரிக்கை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவிய பொய் செய்தி !

முடிவு:

திருச்சியில் ஓட்டு கேட்டு போன அமைச்சர் அன்பில் மகேஷிற்கு எதிர்ப்பு தெரிவித்து விரட்டிய மக்கள் என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க