யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
லஞ்சம் குறித்து புகார் தெரிவிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் அளித்த Toll Free நம்பர் (18004251555) என்று பரவி வரும் எண்ணானது, “காஜா பாம்” நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
“தமிழ்நாட்டில் எந்தவொரு அரசுத் துறையிலும் உங்களிடம் வெறும் ரூ. 1000 லஞ்சம் கேட்கப்பட்டால் கூட, மக்கள் ஆதாரங்களுடன் 18004251555 என்ற Toll Free எண்ணுக்கு தாராளமாகப் புகார் அளிக்கலாம். லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு எதிராக முறையான ஆதாரங்களுடன் புகார் அளிக்கும் குடிமக்களுக்கு ரூ.1,00,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இது நம்ம லிஸ்ட்லியே இல்லையே 🚨🚨
“மக்கள் சர்காரின் ஆட்டம் ஆரம்பம்”🔥🔥https://t.co/HVlUidDsl1 pic.twitter.com/Yj27Apg9zr
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். ஆனால் இந்த பக்கத்தில் இது குறித்தான எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இது குறித்து மேலும் ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடினோம். அப்போது Toll Free எண் என்று பரவி வரும் செய்தியில் இடம்பெற்ற எண் குறித்து தகவல் கிடைத்தது. “காஜா பாம்” நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் 18004251555 பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. இதிலிருந்து இது காஜா பாம் நிறுவனத்திற்கு சொந்தமான எண் என்பது உறுதியானது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, லஞ்சம் கேட்கப்பட்டால் மக்கள் ஆதாரங்களுடன் 18004251555 என்ற Toll Free எண்ணுக்கு தாராளமாகப் புகார் அளிக்கலாம் என்று ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானவை. பரவி வரும் செய்தியில் உள்ள எண் காஜா பாம் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.
