YouTurn

"இல்லம் தேடி வெள்ளம்" என்று பரவும் சென்னை வெள்ளத்தின் பழைய புகைப்படங்கள்!

"இல்லம் தேடி வெள்ளம்" என்று பரவும் சென்னை வெள்ளத்தின் பழைய புகைப்படங்கள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய புகைப்படம்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இவை தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல. கடந்த 2015 மற்றும் 2023-ல் வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள்.

பரவிய செய்தி

"இல்லம் தேடி வெள்ளம்" என்ற புதிய திட்டம் வருகிறது மக்களே..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், சென்னைக்கு தெற்கே 430 கி.மீ தொலைவில் இருந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது. எனவே மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருவது இந்நிலையில் சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் படகுகளில் மக்களை அழைத்து செல்வது போன்ற ஒரு புகைப்படமும், மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ளநீரில் உணவு வழங்குவது போன்ற ஒரு புகைப்படமும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


Link


Link



உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படங்களை “Google Reverse Image Search” பயன்படுத்தி ஆய்வு செய்ததில், இவை தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


 “The Economic Times” ஊடகப் பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு கடந்த 2015 டிசம்பர் 15 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “2015 டிசம்பர் 03 ஆம் தேதி தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்த மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக உடனடியாக ரூ.1,000 கோடியை விடுவிப்பதாக அறிவித்தார்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


 


இதே போன்று மற்றொரு புகைப்படம் குறித்து ஆய்வு செய்ததில், கடந்த 2023 டிசம்பரில் “Reuters“ ஊடகப் பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “மிச்சாங் புயல் சென்னையைத் தாக்கிய நான்கு நாட்களுக்குப் பிறகும் உணவு மற்றும் பொருட்களை வழங்குவதற்காக தன்னார்வலர்கள் தேங்கி நிற்கும் நீரில் நடந்து சென்றனர்“ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 



மேலும் பரவி வரும் இரண்டு புகைப்படங்கள் குறித்து மற்ற ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதையும் இங்கே, இங்கே காண முடிகிறது.  இந்நிலையில் பழைய புகைப்படங்களை தற்போது நடந்த சம்பவம் போல் விமர்சனம் செய்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.


முடிவு: 


நம் தேடலில், பரவி வரும் புகைபடங்கள் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல. கடந்த 2015 மற்றும் 2023-ல் வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க