யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2021ஆம் ஆண்டு ‘Tauktae’ புயல் காரணமாக மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் கடல் சீற்றத்துடன் இருந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் மும்பை தாஜ் கேட்வே அருகில் கனமழை காரணமாக அரபிக்கடல்நீர் கொந்தளிப்பதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
मुंबई में गेटवे ऑफ इंडिया जो हमेशा लोगों से गुलजार रहता है अब लगातार बारिश की वजह से वहां का समुंदर अपना रौद्र रूप दिखा रहा है!
एक बात तो तय है इंसान कितना भी बड़ा हो जाये कुदरत के आगे बेबस ही रहता है! pic.twitter.com/3YkfUFcCcD
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
“@theglobalexhibition2894” யூடியூப் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ கடந்த 2021-லேயே மும்பையில் மழை என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதே போன்று “Ashish Singh” என்ற யூடியூப் பக்கத்திலும், கடந்த 2021 மே 18 அன்று மும்பையின் கேட்வேயில் வெள்ளம் என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோவில் உள்ள அதே காட்சிகளுடன் வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் “ABC News“ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோவின் மூலமும், கடந்த 2021ஆம் ஆண்டு ‘Tauktae’ புயல் காரணமாக மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் கடல் சீற்றத்துடன் இருந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, தற்போது மும்பையில் ஏற்பட்ட வெள்ளம் என்று குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், கடந்த 2021-ல் மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் கடல்நீர் புகுந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
