YouTurn

கையில் மது பாட்டில்களுடன் மாணவிகள் என்று குழுதம் ஊடகம் வெளியிட்ட பழைய வீடியோ!

கையில் மது பாட்டில்களுடன் மாணவிகள் என்று குழுதம் ஊடகம் வெளியிட்ட பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் பேருந்தில் மது அருந்துவதாகக் குறிப்பிட்டு ‘குமுதம் நியூஸ்‘ தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் இது தற்போது நடைபெற்ற சம்பவம் அல்ல. கடந்த 2022 மார்ச் மாதம் எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இதை தற்போது ‘குமுதம் நியூஸ்‘ செய்தியாக வெளியிட்டுள்ளது.

பரவிய செய்தி

கையில் மது பாட்டில்களுடன் மாணவிகள்.. வைரலாகும் வீடியோ

image.png

Archived Link

விரிவான விளக்கம்

பேருந்துக்குள் கும்பலாக நின்று பள்ளி மாணவிகள் மது குடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரல் என்று குழுதம் ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த செய்தி குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது சத்யம் ஊடகத்தில், “பள்ளி மாணவிகள் பேருந்துக்குள் செய்த அதிர்ச்சி காட்சி” என்ற தலைப்பில் மார்ச் 23, 2022 அன்று பரவி வரும் வீடியோவை வைத்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் அரசு பள்ளியில் பயிலும் சில மாணவ - மாணவிகள் ஓடும் பேருந்தில் மது அருந்திக் கொண்டு, அட்டகாசம் செய்யும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இது குறித்து மேலும் தேடியப் போது, APN live ஊடகத்தில் மார்ச் 24, 2022 அன்று ”Tamil Nadu: Video showing school kids drinking beer goes viral, investigation underway” என்ற தலைப்பில் பரவி வரும் வீடியோவில் உள்ள புகைப்படத்துடன் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

image.png


முடிவு: 

எனவே செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் பேருந்தில் மது அருந்துவதாகக் குறிப்பிட்டு ‘குமுதம் நியூஸ்‘ தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் இது தற்போது நடைபெற்ற சம்பவம் அல்ல. கடந்த 2022 மார்ச் மாதம் எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இதை தற்போது ‘குமுதம் நியூஸ்‘ செய்தியாக வெளியிட்டுள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க