
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
அந்த சிறு குழந்தைகளை அடிக்கின்றார், tnpoliceoffl அவருக்கு பாத்ரூம் ட்ரீட்மென்ட் கிடைக்குமா என்று பாருங்கள்.


விரிவான விளக்கம்
பள்ளி சீருடையில் உள்ள இரண்டு மாணவிகளை ஒருவர் மிகக் கொடூரமாக அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அப்பதிவுகளில் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது என்றும் இது தொடர்பாகத் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இச்சம்பவம் தொடர்பாகப் புகைப்படத்துடன் ‘Abp live telugu’ இணையதளத்தில் 2022, செப்டம்பர் 15ம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கில் உள்ள அச்செய்தியை மொழிபெயர்த்துப் படித்ததில் இது தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்பதை அறிய முடிந்தது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடேபள்ளிகூடம் (Tadepalligudem) என்னும் பகுதிக்கு அருகில் வசித்து வந்த கஞ்சி டேவிட் ராஜு (Ganji David Raju) என்பவரது மனைவி நிர்மலா துபாயில் பணி செய்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
மதுவிற்கு அடிமையான டேவிட் ராஜு துபாயில் உள்ள தனது மனைவியைத் திரும்ப வர வைப்பதற்காக, தனது குழந்தைகளை அடித்து சித்திரவதை செய்து வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியதையடுத்து பெண்டபாடு (Pentapadu) காவல் துறையினர் டேவிட் ராஜுவை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த குழந்தைகளையும் மீட்டுள்ளனர்.
மேற்கு கோதாவரி காவல் துறையும் இச்சம்பத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 2022ம் ஆண்டே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கொண்டு தேடியதில், 2023 ஏப்ரல் மாதம் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. துபாயிலிருந்து ஊர் திரும்பிய நிர்மலா குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். பிறகு சிறையிலிருந்த டேவிட் ராஜுவை பிணையில் எடுத்துள்ளார்.

இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழலாமென மனைவியை அழைத்துச் சென்ற நிலையில், சில தினங்களில் மனைவியிடம் சண்டையிட்டு அவரை கொன்றுவிட்டு டேவிட் ராஜுவும் பூச்சி மருந்து அருந்தி இறந்துள்ளார். இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தியில், 2022ம் ஆண்டு டேவிட் ராஜு குழந்தைகளை அடித்த சம்பவமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு ஆந்திராவில் நடந்த சம்பவத்தைத்தான் தற்போது தமிழ்நாட்டில் நடந்தது எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
முடிவு:
இரண்டு சிறுமிகளை ஒருவர் கடுமையாகத் தாக்குவதாகப் பரவும் வீடியோ தமிழ்நாட்டுடன் தொடர்புடையதல்ல. இது 2022ம் ஆண்டு ஆந்திராவில் நடந்துள்ளது. அப்போதே அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கொடுமைக்கும்
தமிழக டாஸ்மாக்கும்
எந்த சம்மந்தமும் இல்லை pic.twitter.com/qdskvo7GEh
— கடுவா (@katuva7) May 13, 2024
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இச்சம்பவம் தொடர்பாகப் புகைப்படத்துடன் ‘Abp live telugu’ இணையதளத்தில் 2022, செப்டம்பர் 15ம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கில் உள்ள அச்செய்தியை மொழிபெயர்த்துப் படித்ததில் இது தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்பதை அறிய முடிந்தது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடேபள்ளிகூடம் (Tadepalligudem) என்னும் பகுதிக்கு அருகில் வசித்து வந்த கஞ்சி டேவிட் ராஜு (Ganji David Raju) என்பவரது மனைவி நிர்மலா துபாயில் பணி செய்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
மதுவிற்கு அடிமையான டேவிட் ராஜு துபாயில் உள்ள தனது மனைவியைத் திரும்ப வர வைப்பதற்காக, தனது குழந்தைகளை அடித்து சித்திரவதை செய்து வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியதையடுத்து பெண்டபாடு (Pentapadu) காவல் துறையினர் டேவிட் ராஜுவை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த குழந்தைகளையும் மீட்டுள்ளனர்.
மேற்கு கோதாவரி காவல் துறையும் இச்சம்பத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 2022ம் ஆண்டே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Already action taken. Children also traced https://t.co/d8UKZXJwXm pic.twitter.com/N4uzBHYD8e
— West Godavari Police (@WG_Police) September 15, 2022
இது தொடர்பாக மேற்கொண்டு தேடியதில், 2023 ஏப்ரல் மாதம் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. துபாயிலிருந்து ஊர் திரும்பிய நிர்மலா குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். பிறகு சிறையிலிருந்த டேவிட் ராஜுவை பிணையில் எடுத்துள்ளார்.

இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழலாமென மனைவியை அழைத்துச் சென்ற நிலையில், சில தினங்களில் மனைவியிடம் சண்டையிட்டு அவரை கொன்றுவிட்டு டேவிட் ராஜுவும் பூச்சி மருந்து அருந்தி இறந்துள்ளார். இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தியில், 2022ம் ஆண்டு டேவிட் ராஜு குழந்தைகளை அடித்த சம்பவமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு ஆந்திராவில் நடந்த சம்பவத்தைத்தான் தற்போது தமிழ்நாட்டில் நடந்தது எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
முடிவு:
இரண்டு சிறுமிகளை ஒருவர் கடுமையாகத் தாக்குவதாகப் பரவும் வீடியோ தமிழ்நாட்டுடன் தொடர்புடையதல்ல. இது 2022ம் ஆண்டு ஆந்திராவில் நடந்துள்ளது. அப்போதே அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.