YouTurn

2026 தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து CRPF வீரர்களால் வெளியேற்றப்பட்டரா அப்பாவு? உண்மை என்ன?

2026 தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து CRPF வீரர்களால் வெளியேற்றப்பட்டரா அப்பாவு? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ 10 ஆண்டுகளுக்கு முன்னாள் 2016 தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்டதாகும்.

பரவிய செய்தி

சபாநாயகர் அப்பாவுவை தூக்கி வெளியே எறிந்த CRPF வீரர்கள்..நீ யாரா வேணா இரு உள்ள அத்துமீறினா குப்பை தான்..போ வெளியே என்று தூக்கி வெளிய  எறிந்த ஜவான்கள்..சிறப்பான சம்பவம்.. 


image.png


Link / Archive Link


விரிவான விளக்கம்

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து கடந்த மே 04ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 


இந்நிலையில், நெல்லை இராதாபுரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதனால் அவரை CRPF வீரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் செய்தி வீடியோ ஒன்று பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன? 


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களை கொண்டும், ‘அப்பாவு வாக்கு எண்ணிக்கை மையத்தில் போராட்டம்’ என்ற Keywords கொண்டும் இணையத்தில் தேடுகையில், ’புதிய தலைமுறை’ செய்தி ஊடகத்தின் யூட்யூப் தளத்தில் இதே வீடியோவைக் காணமுடிந்தது.



2016 மே மாதம் வெளியான இந்த செய்தியில், ”நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் புறக்கணித்ததாக கூறி, அதிகாரிகளுடன் அப்பாவு வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, அவரை துணை ராணுவ படையினர் குண்டுகட்டாக அங்கிருந்து வெளியேற்றினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


இது குறித்து, ‘தினமணி’ செய்தித்தளத்திலும் 2016ஆம் ஆண்டிலே செய்தி வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் இந்த வீடியோ 10 ஆண்டுகளுக்கு முன்னாள் 2016 தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்டது என்பது தெரிகிறது.


முடிவு:


2016 ஆண்டு எடுக்கப்பட்ட 10 ஆண்டுகள் பழைய வீடியோவை, தற்போதைய தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அப்பாவு-வை வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து  CRPF வீரர்கள் வெளியேற்றியதாக தவறாக பரப்புகிறார்கள்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க