YouTurn

திராவிடர் கழகத்தினர் பன்றிக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்தியதாக பரவும் பழைய வீடியோ!

திராவிடர் கழகத்தினர் பன்றிக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்தியதாக பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2017-ல் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. அப்போதே இந்த போராட்டம் நடத்திய 9 பேர் மீதும் மிருகவதைதடை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பரவிய செய்தி

பெத்த அப்பன் தன் பிள்ளைக்கு பூணல் போடுரான்... பன்றிக்கு பூணூல் போட்டு திக போராட்டம்... இதுக்கு எதுக்குடா பன்றியை கொடுமைபடுத்துறீங்க,அவனுக்கே போட்டு விட்ருக்கலாம்.. பொருத்தமா இருந்திருக்கும்…

image.png

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை திராவிடர் கழகம்  நடத்தியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் பன்றியுடன் இருக்கும் நபரை காவல்துறை ஒருவர் அழைத்து செல்வது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது One India Tamil ஊடகப்பக்கத்தில், ”பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் - தபெதிகவைச் சேர்ந்த 9 பேர் கைது” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 7, 2017 அன்று பரவி வரும் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் சென்னையில் பன்றிகளுக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 9 பேர் மீது மிருகவதைதடை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png

இது குறித்து மேலும் தேடி பார்த்த போது, ஆகஸ்ட் 7, 2017 அன்று ”போராட்டம் என்ற பெயரில் பன்றிக் குட்டியை கொன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்” என்ற தலைப்பில் பாலிமர் ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியான செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் காவல்துறையினரின் திசையை திருப்பி ராயபேட்டையில் பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் நடத்தினர். அப்போது அவர்கள் பன்றிகளின் வாயைக் கட்டி, தரதரவென இழுத்துவந்ததாகவும், இதை அறிந்த காவல்துறையினர் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் பன்றிக்குட்டிகள் மீட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. மாறாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 


முடிவு: 

நம் தேடலில், இது 2017-ல் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும். இதை திராவிடர் கழகத்தினர் தற்போது போராட்டம் நடத்தியுள்ளதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க