YouTurn

தற்காலிக பேருந்து ஓட்டுநர்களால் நிகழ்ந்த விபத்துகள் எனப் பரவும் பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் !

தற்காலிக பேருந்து ஓட்டுநர்களால் நிகழ்ந்த விபத்துகள் எனப் பரவும் பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பரவிய செய்தி 1: தற்காலிக ஓட்டுனர்களின் பெர்ஃபார்மென்ஸ்.. பயணிக்கும் பொதுமக்கள் நிலை?



Twitter Link | Archive Link

பரவிய செய்தி 2: தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ்



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் செய்து வந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதைக் கருத்தில் கொண்டு தற்காலிக பேருந்து ஓட்டுநர்களுக்கான அழைப்பை, அரசு விடுத்தது.

மேலும் இந்த போராட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொங்கல் பண்டிகையின் காரணமாக தற்போது போராட்டத்தை ஒத்துவைக்குமாறும் ஊழியர்களை வலியுறுத்தியுள்ளது. எனவே தற்காலிகமாக இந்த போராட்டம் வருகின்ற ஜனவரி 19 வரை தொழிற்சங்கங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனுபவமில்லாமல் பேருந்து ஓட்டியதால், தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் ஏற்படுத்திய கொடுமைகளைப் பாருங்கள் என்று கூறி பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகின்றன.







உண்மை என்ன ?

தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் ஏற்படுத்திய விபத்து என்று கூறி மூன்று புகைப்படங்களை சேர்த்து சிலர் பரப்பி வந்தனர். அந்தப் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் அவை தற்போது எடுக்கப்பட்டவை அல்ல என்பதை அறிய முடிந்தது.

இந்தப் புகைப்படங்களில், சாலையை விட்டு வெளியே சாய்ந்து கிடக்கும் பேருந்தின் புகைப்படம், கடந்த 2018-லேயே சமயம் ஊடகத்தில் "தற்காலிக ஊழியா்களால் இயக்கப்படும் பேருந்துகள்: அதிகாிக்கும் தொடா் விபத்துகள்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.



இதே போன்று புதர்களுக்குள் ஒரு பேருந்து நிற்பது போன்ற புகைப்படத்தையும், கடந்த 2018-லேயே புதிய தலைமுறை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் காண முடிந்தது. மேலும் அதில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் தற்காலிக ஓட்டுநர்களால் ஏற்படுத்தப்பட்ட விபத்து என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.



அடுத்ததாக, பாலத்தின் பகுதியில் பேருந்து குறுக்கே நிற்கும் பேருந்தின் புகைப்படம், கோவை போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்தது. அது சாதாரண பேருந்தான வெள்ளை போர்டு உடன் இருக்கிறது. ஆனால், 2021ம் ஆண்டு திமுக ஆட்சியில் மகளிர் இலவச பேருந்து சேவையை முன்னிட்டு வெள்ளை போர்டு பேருந்துகளின் முகப்பு பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டன.

மேலும், ஆறு பேருந்துகள் அடுத்தடுத்து இடைவெளியின்றி மோதிக் கொண்டு நிற்கும் வீடியோ குறித்து தேடியதிலும், இது கடந்த 2019 நவம்பர் 24 அன்றே அழகு அரூர் / Azhagu Harur என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவாகி இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தஞ்சாவூரில் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.



அடுத்ததாக, பேருந்து தலைகீழாக கவிழ்ந்து நிற்கும் புகைப்படம் குறித்து, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செய்து தேடியதில், இந்தப் புகைப்படம் கடந்த 2023 ஜூன் 25 அன்று NDTV ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ளது. அதில், இது திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் அரசு பேருந்தும், காரும் மோதிக் கொண்ட போது ஏற்பட்ட விபத்து என்றும், இந்த விபத்தில் 5 பேர் மரணமடைந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.



மேலும் பேருந்து ஒன்று வயல் பரப்பில் உள்ள ஓடையில் தடுமாறி நிற்பதைப் போன்ற புகைப்படமும், தற்போது தற்காலிக ஓட்டுநர்கள் ஏற்படுத்திய விபத்து என்று கூறி தவறாகப் பரப்பப்படுகிறது. இதுவும் கடந்த 2022-ல் நாகர்கோவிலில் ஏற்பட்ட பேருந்து விபத்தின் போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் தான் என்பதை New Indianexpress வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் தெளிவாகிறது.



தற்காலிக பேருந்து ஓட்டுனர்களால் ஏற்படும் விபத்து மற்றும் பேருந்தை கையாள முடியாமல் பாதியில் நிற்பது உள்ளிட்ட சம்பவங்கள் சில செய்திகளில் வெளியாகி இருக்கின்றன. ஆனால், பழைய மற்றும் தவறான படங்களையும், வீடியோக்களையும் தற்போது தவறாக பரப்பி வருகின்றனர்.

முடிவு:

நம் தேடலில், தமிழ்நாட்டில் பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்துவதால், தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் ஏற்படுத்திய விபத்துக்கள் என பழைய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்டவை எனத் தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க