YouTurn

டாஸ்மாக் கடைக்கு இந்தியில் பெயர்பலகை வைக்க அனுமதித்ததா தமிழ்நாடு அரசு?

டாஸ்மாக் கடைக்கு இந்தியில் பெயர்பலகை வைக்க அனுமதித்ததா தமிழ்நாடு அரசு?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2024ஆம் ஆண்டு டாஸ்மாக் கடை ஒன்றின் பெயர் பலகையில் இந்தி இடம்பெற்றதால் ஏற்பட்ட சர்ச்சையால் அப்போதே அந்த பெயர் பலகை மாற்றப்பட்டுவிட்டது.

பரவிய செய்தி

‘திமுக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் மட்டும் இந்தி திணிப்பு பாதகமானதாக இருக்காது’ - இந்து மக்கள் கட்சி


image.png


X Link / Archive Link


image.png


X Link / Archive LInk  

விரிவான விளக்கம்

மதுபானக் கடை ஒன்றின் பெயர் பலகை ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ள புகைப்படத்தை பதிவிட்டு, ‘திமுக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் மட்டும் இந்தி திணிப்பு பாதகமானதாக இருக்காது’ என்று ‘இந்து மக்கள் கட்சி’ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பரப்பி வருகிறது. 


உண்மை என்ன?


பரப்பப்படும் புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடினோம். இது குறித்து ‘ABP தமிழ்’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. 


image.png


2024 ஜனவரி மாதம் வெளியாகியுள்ள அந்த செய்தியில், ‘நாமக்கலை அடுத்த முதலைப்பட்டி சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை ஒன்றில் இந்த பெயர் பலகை வைக்கப்பட்டதாகவும், இதனை தொடர்ந்து நடந்த சர்ச்சையால் இந்த பெயர் பலகை அப்போதே மாற்றப்பட்டுவிட்டதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும், பரவி வருவது 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்றும் அந்த பெயர் பலகை அப்போதே மாற்றப்பட்டுவிட்டதாகவும் ‘தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம்’ உறுதிபடுத்தியுள்ளது. 


முடிவு: 


2024ஆம் ஆண்டு இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையால் அப்போதே அது மாற்றப்பட்டுவிட்டது. இந்த பழைய சம்பவம் குறித்த புகைப்படத்தை தற்போது நடந்ததாக ‘இந்து மக்கள் கட்சி’ தவறான தகவலை பரப்பி வருகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க