YouTurn

பிரதமர் மோடி வருகையால் பூத்த தாமரை எனப் பழைய படத்தை தவறாகப் பரப்பும் பாஜகவினர்!

பிரதமர் மோடி வருகையால் பூத்த தாமரை எனப் பழைய படத்தை தவறாகப் பரப்பும் பாஜகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

திருநெல் வேலி நயினார் குளம். நேற்று 400 மேல் தாமரை மலர்ந்தது. இதை காண மக்கள் கூட்டமாக பார்த்து செல்கிறார்கள்..



X Link | Archive Link


விரிவான விளக்கம்

2024 மக்களவைத் தேர்தல் தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற ஜூன் 04 அன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் "திருநெல்வேலியில் அமைந்துள்ள நயினார் குளத்தில் நேற்று (ஜூன் 30) 400 தாமரைகளுக்கு மேல் மலர்ந்துள்ளன. இது ஒரு மங்கள அறிகுறி. தமிழ்நாட்டில்  பிரதமர் நரேந்திரமோடி வந்திருக்கும் நேரம் இது நிகழ்ந்துள்ளது" என்று கூறி குளத்தில் தாமரைகள் நிறைந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்படுகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படம் புனேவில் எடுக்கப்பட்டது என்று கூறி கடந்த 2022 லேயே "Whats Hot Pune" என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. 



இது குறித்து மேலும் தேடியதில், இதே புகைப்படம் ISTOCK இணையதளப் பக்கத்தில், 2016 அக்டோபர் 11 அன்று  "ThuTruong" என்ற புகைப்படகலைஞரின் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.



அவருடைய பக்கங்களில் பெரும்பாலானவை சீன உணவுகளையும், சீனர்களையும் அடிப்படையாகக் கொண்டவையாக பதிவிடப்பட்டிருந்தன.



ஆனால் குளத்தில் தாமரைகள் இருப்பது போன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இவை கடந்த 2016 இல் இருந்தே இணையதள பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளன என்பது உறுதியாகிறது.

மேலும் படிக்க: ஜெகந்நாதர் கோவில் சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் மோடி தியானம் செய்கிறார் என அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

மேலும் படிக்க: இந்திய வளங்களின் மீதான முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கே’ என்று மன்மோகன்சிங் கூறியதாக பொய் பரப்பும் பிரதமர் மோடி !

முடிவு:

நம் தேடலில், திருநெல்வேலி நயினார் குளத்தில் மோடி வருகையையொட்டி மலர்ந்துள்ள தாமரைகள் எனப் பரவும் புகைப்படம், 2016 இல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவிவரும் பழைய புகைப்படம் என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க