YouTurn

தேர்தல் விளம்பரத்திற்கான ஜவ்வாதுமலை சுற்றுலா திட்டத்தை அறிவித்ததா திமுக? 'News J' பரப்பும் தவறான செய்தி!

தேர்தல் விளம்பரத்திற்கான ஜவ்வாதுமலை சுற்றுலா திட்டத்தை அறிவித்ததா திமுக? 'News J' பரப்பும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2025ஆம் ஆண்டு ஜூலை மாதமே ஜவ்வாதுமலையில் உள்ள பலாமரத்துார் கிராமத்தில் சாகச சுற்றுலா தலம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்திருக்கிறது.

பரவிய செய்தி

"5 ஆண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டுத் தேர்தலுக்கு 30 நாட்களே உள்ள நிலையில் ஜவ்வாது மலை சுற்றுலாத் திட்டத்தை அவசரமாக அறிவித்துள்ள ஸ்டாலின் அரசு. 7.65 ஏக்கரில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் நீண்டகாலத் தாமதத்திற்கு விளக்கம் அளிக்காதது அரசின் நிர்வாகத் தோல்வியையும் கடைசிநேரத் தேர்தல் விளம்பர அரசியலையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது” - News J


image.png


Link

விரிவான விளக்கம்

கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி ‘News J’ தொலைக்காட்சி News Card ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘5 ஆண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டுத் தேர்தலுக்கு 30 நாட்களே உள்ள நிலையில் ஜவ்வாதுமலை சுற்றுலாத் திட்டத்தை அவசரமாக அறிவித்துள்ளது ஸ்டாலின் அரசு. இது கடைசிநேரத் தேர்தல் விளம்பர அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

உண்மை என்ன? 


ஜவ்வாது மலையில் சுற்றுலா திட்டம் குறித்த செய்திகளைத் தேடினோம். 2025 ஜூலை 2ஆம் தேதி ‘ABP நாடு’ வெளியிட்டுள்ள செய்தியைக் காணமுடிந்தது. 


image.png


அதில், 2025 ஜூலை மாதம் ஜவ்வாதுமலையில் நடந்த 25வது கோடை விழாவை தொடங்கி வைத்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ’ஜவ்வாதுமலையில் உள்ள பலாமரத்துார் கிராமத்தில் சாகச சுற்றுலா தலம் அமைப்பதற்காக 2 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாக’ தெரிவித்தார். மேலும், ஜவ்வாதுமலை ஆதிசிவன் கோவில் புனரமைக்கும் பணிக்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.



இதே செய்தியை ‘தினமலர்’ செய்தித்தளத்திலும் காணமுடிகிறது. 


இதிலிருந்து, 2025ஆம்  ஆண்டு ஜூலை மாதமே ஜவ்வாதுமலையில் சுற்றுலா தலம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்ததை அறியமுடிகிறது.


முடிவு: 


2025ஆம் ஆண்டு ஜூலை மாதமே தொடங்கப்பட்ட சுற்றுலா திட்டத்தை, தேர்தல் விளம்பரத்திற்காக திமுக அரசு தற்போதுதான் அறிவித்துள்ளதாக  ’News J’ செய்தி ஊடகம் தவறான தகவலை பரப்பி வருகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க