YouTurn

‘நெல்சனுக்கு ரஜினியால் ஏற்பட்ட விபரீதம்’ எனப் பரவும் போலியான நியூஸ் கார்டு!

‘நெல்சனுக்கு ரஜினியால் ஏற்பட்ட விபரீதம்’ எனப் பரவும் போலியான நியூஸ் கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடத்தப்படுகிறது, ரஜினி ரவுடி கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுக்க சொன்னதாலேயே, நெல்சனின் மனைவி அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணை” என்று கூறி நியூஸ்18 தமிழ்நாடு ஊடகத்தின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

நெல்சன்க்கு ரஜினியால் ஏற்ப்பட்ட விபரீதம்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை. ரஜினியின் ரசிகர் ரவுடி கிருஷ்ணனுக்கு ரஜினி சொல்லிய வார்த்தைக்காக அடைக்கலம் கொடுத்தாரா சந்தேகத்தில் விசாரணை; அடுத்தகட்டமாக நெல்சனிடம் விசாரணை நடத்தவும் காவல்துறை திட்டம் எனத் தகவல்.

X Link | Archive Link

விரிவான விளக்கம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பெரம்பூரில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேரை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடத்தப்படுகிறது, நடிகர் ரஜினி, ரவுடி கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுக்க சொன்னதாலேயே, நெல்சனின் மனைவி அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணை” என்று கூறி நியூஸ்18 தமிழ்நாடு ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


உண்மை என்ன?

பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து, ‘நியூஸ்18 தமிழ்நாடு’ ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் தேடிப் பார்த்ததில், “நெல்சனுக்கு ரஜினியால் ஏற்பட்ட விபரீதம்!” என்ற தலைப்பில் எந்த நியூஸ் கார்டையும் ‘நியூஸ்18 தமிழ்நாடு’ வெளியிடவில்லை என்பதை உறுதிபடுத்த முடிந்தது. மேலும் பரவி வரும் நியூஸ் கார்டில் பல எழுத்துப்பிழைகள் இருப்பதையும் காணமுடிகிறது. 

இதைத் தொடர்ந்து பரவி வரும் நியூஸ் கார்டை “Google Reverse Image Search” மூலம் ஆய்வு செய்து பார்த்தோம். “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 20 அன்று ‘நியூஸ்18 தமிழ்நாடு’ தனது சமூக ஊடகப் பக்கங்களில் நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததைக் காணமுடிந்தது.

பரவி வரும் நியூஸ் கார்டுடன் இதை ஒப்பீடு செய்து பார்த்ததில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டை, எடிட் செய்து “நெல்சனுக்கு ரஜினியால் ஏற்பட்ட விபரீதம்!” என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது. 

முடிவு:

நம் தேடலில், நெல்சனுக்கு ரஜினியால் விபரீதம் எனக் குறிப்பிட்டு ‘நியூஸ்18 தமிழ்நாடு’ ஊடகத்தின் பெயரில் பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பதை அறியமுடிகிறது.  









பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க