யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2022ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை குறித்து அர்ச்சகர் ஒருவர் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதனை தற்போது நடந்தது போல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
பரவிய செய்தி
முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.. இந்த நாடே நாசமா போகணுமா? ஆதங்கத்தை கொட்டி தீர்த்த அர்ச்சகர்.!

விரிவான விளக்கம்
ஆதங்கத்தை கொட்டி தீர்த்த அர்ச்சகர் என்ற தலைப்பில் news tamil 24x7 ஊடகம் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பேசும் ஒரு அர்ச்சகர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தால் கோயிலில் பணிப்புரியும் குருக்கள் உடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு உரிய தீர்வு தர வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுயிருந்தது.
#MuruganMaanadu
ஒரு கோயில் அர்ச்சகர் தனது மனவேதனைகளை
மதுரை மாநாட்டு திடலில் சொல்லி அழுத காட்சி.
இவருடைய வேதனைகளும் வலியும் ஆளும் திமுக அரசை அழிக்கும். pic.twitter.com/9cEmkEPUa2
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி குறித்து தேடி பார்த்தோம். அப்போது Shubham Sharma என்ற எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் செய்தியின் screenshot-ஐ பகிர்ந்து ஏப்ரல் 23, 2022 அன்று ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தால், 12 வருடமாக கடவுளுக்கு சேவை செய்து வந்தவர்கள் பணிநீக்கம் செய்கின்றனர் என்றும், இது இந்தியாவில் பிராமணர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதற்கான அறிகுறி எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Brahmin priests were fired from the services to accommodate the priests selected from the crash courses. A priest who was serving God for more than 12 years has talked to the media and burst into tears. These tears are a sign that Brahmins have no scope in India. pic.twitter.com/8jMv1DzBrq
இதை வைத்து கூகுளில் தேடி பார்த்தோம். அப்போது ”நடுத்தெருவுல நிக்கிறோம்.. நாசமா போவீங்க! அனைத்து சாதியினர் அர்ச்சகராவதை எதிர்த்து கொதித்த அர்ச்சகர்” என்ற தலைப்பில் ஏப்ரல் 20, 2022 அன்று One India ஊடகம் செய்தி வெளியிட்டியிருந்தது. அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தால் நடுத்தெருவில் நிற்பதாகவும், அதை கொண்டு வந்தவர்கள் நாசமாய் போவார்கள் என்றும் திருச்சி குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அர்ச்சகர் சாபம் விடும் வீடியோ வைரலாகி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த செய்தியில், தற்போது பரவி வரும் செய்தியின் screenshotகளும் இடம்பெற்றுயிருந்தது.

அதே போல் ஏப்ரல் 21, 2022 அன்று "நடுத்தெருவுல நிக்கிறோம்...!அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதா..? குருக்கள் சாபம்" என்ற தலைப்பில் Behindwoods Air ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டிருந்ததையும் பார்க்கமுடிந்தது.
முடிவு :
கடந்த 2022ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை குறித்து அர்ச்சகர் ஒருவர் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதை தற்போது நடந்தது போல் News Tamil 24x7 ஊடகம் தவறாக செய்தி வெளியிட்டுள்ளது.