யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 (Rights of Persons with Disabilities Act, 2016)-இன் பிரிவு 34-ன் அடிப்படையில், அரசு பணிகளில் பதவி உயர்வில் (Reservation in Promotion) 4% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டது.
பரவிய செய்தி
CM Vijay orders implementation of 4% reservation for differently-abled persons and quick action on their requests.

விரிவான விளக்கம்
முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு, அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டுள்ளது என்று கூறி பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
CM Vijay orders implementation of 4% reservation for differently-abled persons and quick action on their requests. pic.twitter.com/GlV8vDNdMz
உண்மை என்ன?
இது குறித்து keywords மூலம் கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது அரசுப் பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியின் போதே 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதற்கான அரசாணை ஒன்று வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.

அதில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 (Rights of Persons with Disabilities Act, 2016)-இன் பிரிவு 34-ன் அடிப்படையில், அரசு பணிகளில் பதவி உயர்வில் (Reservation in Promotion) 4% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டதை பார்க்கமுடிந்தது. மேலும் அரசாணையில் 4% இடஒதுக்கீடு அனைத்து பணிகளுக்கும் அல்ல; அரசு அடையாளம் காணும் (identified) பதவிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டது. இந்நிலையில் முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.