YouTurn

இராமர் படத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

இராமர் படத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

22. 1. 2024 ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதியதாக அறிமுகம் ஆகி உள்ள 500 ரூபாய் நோட்டு ஜெய்ஹிந்த்

Facebook link

விரிவான விளக்கம்

ஜனவரி 22ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டில் ராமர் படம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. அப்படத்தினை இந்து மக்கள் கட்சியும் தங்களது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 



உண்மை என்ன ?

பரவக் கூடிய ரூபாய் நோட்டு குறித்த முக்கிய வார்த்தைகள் கொண்டு இணையத்தில் தேடியதில், அதே வரிசை எண் கொண்ட 500 ரூபாய் நோட்டு  ‘Discount Walas’ என்னும் தளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

போலி ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காண்பது தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட மாதிரி படத்தில், ராமர் படத்துடன் இருக்கும் ரூபாய் நோட்டில் உள்ள அதே வரிசை எண் உள்ளது. ஆனால், அதில் ராமர் படம் இல்லை. மகாத்மா காந்தியின் படமே உள்ளது.

மேற்கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அல்லது ஒன்றிய அரசு புதிய ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக ஏதேனும் அறிவிப்புகளை வெளியிட்டதா எனத் தேடினோம். அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.



மேலும் பரவக் கூடிய ரூபாய் நோட்டில் இடது பக்கம் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு 2016 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. Discount Walas கட்டுரையில் உள்ள மாதிரி படத்திலும் இதே ஆண்டுதான் உள்ளது. ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 2019ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

இவற்றில் இருந்து புதிய ரூபாய் நோட்டில் ராமர் படம் இருப்பதாகப் பரவும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

முடிவு:

நம் தேடலில், ராமர் படத்துடன் புதிய ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகப் பரவும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியோ, ஒன்றிய அரசோ அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க