யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களது இல்லத்தில் கொலு வைத்து நவராத்திரி கொண்டாடுவதாக உடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகப்பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
இது யார் வீட்டு கொலு தெரியுமா?? The fellow who said will eradicate sanatana dharma U.Stalin, (TN- CM's house).... In their House watching "FLOURISHING SANATANA DHARMA"... அவ அம்மா வெச்ச கொலு!!

விரிவான விளக்கம்
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களது இல்லத்தில் கொலு வைத்து நவராத்திரி கொண்டாடுவதாக உடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகப்பக்கங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், சென்னை மயிலாப்பூரில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்பட்ட நவராத்திரி விழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு உள்ளிட்டோருடன் தொடங்கி வைத்ததாகக் கூறி mylaporetimes வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் இப்படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காணமுடிந்தது. இச்செய்தியானது அக்டோபர் 16, 2023 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் தேடுகையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மயிலாப்பூரில் நடந்த இந்த கொலு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அக்டோபர் 15, 2023 அன்று பதிவிட்டிருந்தை காணமுடிந்தது.
அப்பதிவில் வைரலாகும் படமும் இடம்பெற்றிருந்தது.
இவற்றிலிருந்து மு.க ஸ்டாலின் வீட்டில் நவராத்திரி கொலு வைத்து கொண்டாடியதாகப் பரவும் புகைப்படம் தவறானது என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு வைத்ததாகப் பரப்பப்படும் புகைப்படம் தவறானது. இப்புகைப்படம் கடந்த வருடம் சென்னை மயிலாப்பூரில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்பட்ட நவராத்திரி விழாவில் எடுக்கப்பட்டது என்பதே உண்மையான தகவல்.