YouTurn

கிருஷ்ண ஜெயந்தி அன்று குரங்குகள் உணவு அருந்தியதாக பரவும் AI வீடியோ!

கிருஷ்ண ஜெயந்தி அன்று குரங்குகள் உணவு அருந்தியதாக பரவும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வாரணாசியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குரங்குகள் உணவு அருந்தியதாக பரவும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதனை உண்மையாக நடந்த சம்பவம் என்று கூறி தவறாக பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

வாரணாசி கிருஷ்ண ஜென்மஸ்டமி

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

கிருஷ்ண ஜெயந்தி விழா ஆகஸ்ட் 16ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் வாரணாசியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு குரங்குகள் உணவு அருந்தியதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது Rising Rastra Tv என்ற யூடியூப் பக்கத்தில் ஆகஸ்ட் 7, 2025 அன்றே பதிவாகியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. எனவே இது கிருஷ்ண ஜெயந்தி முன்பே இருந்து பரவி வருவது உறுதியானது. 


இதையடுத்து இந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததது. அதை அறிய பரவி வரும் விடியோவை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் இது 99.4% AI தொழில்நுட்பத்தால் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதியானது.


இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க : இந்தியாவில் ராமர் புகைப்படத்துடன் ரயில்கள் எனப் பரவும் AI புகைப்படங்கள்! 


ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலம் என்று பரவும் AI புகைப்படம்! 


முடிவு: 

நம் தேடலில், வாரணாசியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குரங்குகள் உணவு அருந்தியதாக பரவும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதனை உண்மையாக நடந்த சம்பவம் என்று கூறி தவறாக பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க