YouTurn

பிரதமர் மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு பரவும் புகைப்படம்.. உண்மை என்ன ?

பிரதமர் மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு பரவும் புகைப்படம்.. உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

பரவிய செய்தி

வரலாறு திரும்புகிறது... எதிர்காலம் முள்வேலிக்கு பின்னால் உள்ளது..Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

பிரதமர் மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மோடி மற்றும் ஹிட்லருக்கு அருகே முள் வேலிக்கு பின்னால் இருக்கும் குழந்தைகள் நிற்கிறார்கள். இப்படத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வரலாறு திரும்புகிறது எனப் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link 



உண்மை என்ன ? 

பிரதமர் மோடி முள் வேலிக்கு பின்னால் நிற்கும் குழந்தைகளுடன் பேசும் புகைப்படம் 2023 மே மாதம் கர்நாடகா மாநிலம் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்டது.



Twitter link | Archive link

2023 மே 2ம் தேதி கர்நாடகாவின் கலபுரகி பகுதியில் சாலை அணிவகுப்பு நிகழ்சிக்கு முன்பாக குழந்தைகளுடன் பிரதமர் மோடி பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோ ஏஎன்ஐ செய்தி முகமையில் வெளியாகி இருக்கிறது.

இந்த வீடியோ வெளியான போதே, பிரதமர் மோடி முள் வேலிக்கு பின்னால் இருக்கும் குழந்தைகளின் கையை தொட மறுத்ததாகவும். குழந்தைகளை முள் வேலிக்கு பின்னால் நிற்க வைத்து பேசியது நியாயமா என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

அடுத்ததாக, ஹிட்லருக்கு அருகே முள் வேலிக்கு பின்னால் குழந்தைகள் நிற்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அது வெவ்வேறு புகைப்படங்கள் என்பதை அறிய முடிந்தது.



முள் வேலிகளுக்கு பின்னால் குழந்தைகள் நிற்கும் புகைப்படம் தி கார்டியன் செய்திக் கட்டுரையில் இடம்பெற்று இருக்கிறது. அப்புகைப்படத்திற்கு கீழே, " 1945ல் செம்படையால் விடுவிக்கப்பட்ட ஆஷ்விட்ஸ் மரண முகாமில் உயிர் பிழைத்த குழந்தைகள் " எனக் கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஹிட்லரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், புகைப்பட விற்பனை தளமான Alamy இணையதளத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.



மேலும் படிக்க : என்னை வெறுங்கள், நாட்டை வெறுக்காதீர்கள் ? ஹிட்லர், மோடி பேச்சில் ஒற்றுமையா?

மேலும் படிக்க : ” நான் தவறாக இருந்தால் உயிருடன் என்னை எரியுங்கள் ” ஹிட்லர் கூறினாரா ?

இதற்கு முன்பாக, பிரதமர் மோடி மற்றும் ஹட்லரை ஒப்பிட்டு பரப்பப்பட்ட பிற தவறான தகவல்கள் குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், முள் வேலிகளுக்கு பின்னால் இருக்கும் குழந்தைகளுடன் பிரதமர் மோடி பேசும் புகைப்படம் சில நாட்களுக்கு முன்பாக கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்டது.

அடுத்ததாக, ஹிட்லர் மற்றும் முள் வேலிகளுக்கு பின்னால் குழந்தைகள் இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க