யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மாநாடு நடந்த அரங்கிற்கு இருவரும் ஒன்றாகத்தான் வருகைதந்துள்ளனர். எனவே அரங்கில் சந்தித்த பிற நாட்டுத் தலைவர்களுக்கு மட்டும் கை கொடுத்து வரவேற்றுள்ளார்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பிரான்சில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் அந்நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கை கொடுக்காமல் அவமதித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
விஸ்வகுரு 🥲😭 pic.twitter.com/1S76XTlSEJ
உண்மை என்ன?
இந்தியப் பிரதமர் பிரான்சில் நடைபெறும் AI மாநாட்டில் கலந்து கொண்டது தொடர்பாகச் செய்திகளைத் தேடி ஆராய்ந்தோம். பிரான்ஸ் சென்றுள்ள மோடியை இமானுவேல் வரவேற்கும் வீடியோ அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியை பாரீஸ் நகரத்துக்கு வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Welcome to Paris, my friend @NarendraModi! Nice to meet you dear @VP Vance! Welcome to all our partners for the AI Action Summit.
Let’s get to work! pic.twitter.com/yatkrVYv9x
மேற்கொண்டு AI மாநாட்டு அரங்கில் மோடிக்கு மட்டும் ஏன் இமானுவேல் கை கொடுக்கவில்லை என்பது குறித்துத் தேடினோம். ‘Firstpost’ ஊடகம் மாநாட்டின் முழு வீடியோவை பதிவிட்டுள்ளது. அதில், மோடியும் இமானுவேலும் ஒன்றாக அரங்கிற்கு வருதை காண முடிகிறது. முன்னதாக இருவரும் கை கொடுத்தபடி ஊடகங்களுக்கு போஸ் கொடுப்பதையும் காணலாம்.
பிறகு அரங்கிற்குள் வந்ததும் புதிதாகச் சந்தித்த பிறநாட்டுத் தலைவர்களை வரவேற்கும் விதமாக கை கொடுத்துள்ளார் இமானுவேல். மாநாடு தொடர்பாக மோடியின் எக்ஸ் பக்க பதிவிலும் இருவரும் ஒன்றாக கை கொடுத்துகொண்டு இருக்க கூடிய படத்தினை பார்க்க முடிகிறது.
The AI Action Summit in Paris is a commendable effort to bring together world leaders, policy makers, thinkers, innovators and youngsters to have meaningful conversations around AI. pic.twitter.com/kSXy0FhuIT
மாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவின் சிறு பகுதியை மட்டும் கொண்டு மோடி அவமதிக்கப்பட்டதாக ஒரு தவறான தகவல் பரப்பப்படுகிறது.
முடிவு:
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் இந்தியப் பிரதமர் மோடிக்கு கை கொடுக்காமல் அவமதித்ததாகப் பரவும் தகவல் தவறானது. மாநாடு நடந்த அரங்கிற்கு இருவரும் ஒன்றாகத்தான் வருகைதந்துள்ளனர். எனவே அரங்கில் சந்தித்த பிற நாட்டுத் தலைவர்களுக்கு மட்டும் கை கொடுத்து வரவேற்றுள்ளார்.