
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
*இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியும், பெண் வக்கீலும் கட்டிப்புரண்டு குடுமிபிடி சண்டை காட்சிகள் வைரல்* pic.twitter.com/V2rRYSLFk2
— தேசியம் பேசும் தமிழன் (@bharanipaints) February 28, 2023
*இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியும், பெண் வக்கீலும் கட்டிப்புரண்டு குடுமிபிடி சண்டை காட்சிகள் வைரல்* FIRST TIME IN INDIA A LADY JUDGE AND LADY ADVOCATE OPENLY HAD A FIST FIGHT THAT TOO IN A COURT IN MAHARASHTRA, SEPARATED BY A LADY POLICE OFFICER. 😅🤣 pic.twitter.com/K34joYOYUf
— HINDUSTHANI (@RudramurthiMur4) March 1, 2023
உண்மை என்ன ?
நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரின் சண்டை குறித்து தேடுகையில், " 2022 அக்டோபர் 29ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தில் வைரல் செய்யப்படும் வீடியோ தொடர்பான செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால், அந்த வீடியோவில் சண்டையிடும் இரண்டு பேருமே வழக்கறிஞர் என்றேக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

செய்தியில், " உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஸ்காஞ் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாறி மாறி அடித்துக் கொண்டு உள்ளனர். இது தொடர்பாக அலிகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் மீது காஸ்காஞ் பெண் வழக்கறிஞர் புகார் கொடுத்து உள்ளதாகக் " கூறப்பட்டு உள்ளது.

டைனிக் பாஸ்கர் எனும் இந்தி செய்தி தளத்தில், " குடும்ப நல வழக்கு தொடர்பாக காஸ்காஞ் மாவட்ட நீதிமன்றத்தில் வாதாட வந்த அலிகார் வழக்கறிஞர் சுனிதா கௌசிக் மற்றும் காஸ்காஞ் வழக்கறிஞர் கவிதா சக்சேனா இடையே உருவான வார்த்தை மோதலால் சண்டை ஏற்பட்டதாக " குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க : சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தல்வீர் பண்டாரி தேர்வு – மோடியின் ராஜதந்திரம் எனப் பரப்பப்படும் பொய் செய்தி !
முடிவு :
நம் தேடலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் நீதிபதியும், பெண் வழக்கறிஞரும் சண்டையிடுவதாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோவில் இருப்பது நீதிபதி அல்ல, இரண்டு பேரும் வழக்கறிஞர்கள் தான். இந்த சம்பவம் நிகழ்ந்தது மகாராஷ்டிரா அல்ல, உத்தரப்பிரதேசம் என்பதை அறிய முடிகிறது.