YouTurn

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திலிருந்து 80 லட்சம் பெண்களை நீக்கியதா தவெக அரசு? உண்மை என்ன?

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திலிருந்து 80 லட்சம் பெண்களை நீக்கியதா தவெக அரசு? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மகளிர் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 80 லட்சம் பெண் பயனாளிகள் நீக்கப்பட்டனர். இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல.

பரவிய செய்தி

மகளிர் உதவித் தொகை திட்டத்திலிருந்து 80 லட்சம் பெண்கள் அதிரடி நீக்கம்..!!

#TVKFails 



Instagram Link


image.png


Thread Link


விரிவான விளக்கம்

விஜய் தலைமையிலான தவெக அரசு புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், முந்தைய திமுக ஆட்சியில் நடைமுறைபடுத்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற்று வரும் 80 லட்சம் பெண்களை அத்திட்டத்தில் இருந்து தவெக அரசு நீக்கியுள்ளதாகவும், புதிய பயனாளிகள் யாரும் அத்திட்டத்தில் சேரமுடியாது என்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.




உண்மை என்ன?


‘மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்’ இருந்து 80 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ’மாலை மலர்’ செய்தித்தளத்தில் இதுகுறித்த செய்தியைக் காணமுடிந்தது. அதில் ‘மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்கள் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 80 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை ‘News 18 தமிழ்நாடு’ செய்தித்தளமும் வெளியிட்டுள்ளது. 


image.png


அதன்படி, தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, கர்நாடக மாநிலத்தில் ’க்ருகா லட்சுமி திட்டம்’ என்ற பெயரிலும், டெல்லி மாநிலத்தில் ’மகிலா சம்ரிதி யோஜனா’ என்ற பெயரிலும், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 'முக்கியமந்திரி மாஜி லட்கி பஹின் யோஜனா' என்ற பெயரிலும் பெண்களின் வங்கிக்கணக்கில் மாதம்தோறும் பணம் வரவு வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


image.png


மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 'முக்கியமந்திரி மாஜி லட்கி பஹின் யோஜனா’ திட்டத்தின் கீழ் 2.46 கோடி பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திட்டப் பயனாளிகளை தணிக்கை செய்ய e-KYC நடைமுறையை மகாராஷ்ட்ரா அரசு கட்டாயமாக்கியது. இதற்கு 2026 ஏப்ரல் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த காலத்திற்குள்  e-KYC சரிபார்ப்பை முடிக்காத 80 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீக்கப்பட்ட பயனாளிகள் மீண்டும் சேர்க்கப்படமாட்டார்கள் என்றும் மகாராஷ்ட்ரா அரசு கூறியுள்ளதாக தெரிகிறது.


இதிலிருந்து, மகளிர் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 80 லட்சம் பெண் பயனாளிகள் நீக்கப்பட்ட சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்துள்ளது தெளிவாக தெரிகிறது.


முடிவு:


மகாராஷ்ட்ரா மாநிலத்தில்  மகளிர் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 80 லட்சம் பெண் பயனாளிகள் நீக்கப்பட்ட சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக திரித்து பரப்புகிறார்கள். 

 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க