YouTurn

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டது பழைய செய்தியா? உண்மை என்ன?

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டது பழைய  செய்தியா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

லாட்டரி சீட்டு விற்பனை செய்ததற்காக திருத்துறைப்பூண்டியில் 3 பேர் கைது செய்யப்பட்டது சமீபத்திய செய்திதான். ஆனால் அந்த புகைப்படம் பழைய புகைப்படம் தான்.

பரவிய செய்தி

’தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததற்காக மூன்று பேரை சமீபத்தில் போலீஸ் கைது செய்ததாக திமுகவினர் பொய் செய்தி பரப்புகிறார்கள்’ - தவெக மாநில சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளர். 



Link / Archive Link 


விரிவான விளக்கம்

திருத்துறைப்பூண்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரொக்க பணத்தையும் லாட்டரி சீட்டுகளையும் காவல்துறை பறிமுதல் செய்தது என்று லாட்டரி சீட்டு புகைப்படத்துடன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 


ஆனால், இதனை மறுத்து இவ்வாறு லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பரப்பப்படுவது பழைய செய்தி என்றும் அந்த புகைப்படத்தில் உள்ள லாட்டரி சீட்டுகள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது என்றும் திமுகவினர் பொய் செய்தியை பரப்புவதாகவும் தவெக மாநில சமூக ஊடக அணியினர் பதிவிட்டுள்ளனர். 



உண்மை என்ன?


சமீபத்தில்  லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக கைதுகள் ஏதேனும் நடந்திருக்கிறதா என்று செய்திகளை தேடினோம். ‘Sun News’ சமூக வலைத்தள பக்கத்தில் மே 14ஆம் தேதி (இன்று) வெளியாகியிருந்த செய்தியைக் காணமுடிந்தது. 



அதில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்ததாகவும், அவர்களிடமிருந்து ரூ.2.43 லட்சம் பணம் மற்றும் 160 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே செய்தியை ’தினகரன்’ செய்தித்தளமும் வெளியிட்டுள்ளதைக் காணமுடிகிறது. 



அதேநேரத்தில், சமூக வலைத்தள பதிவில் உள்ள லாட்டரி சீட்டு புகைப்படம் ஏற்கனவே இணையத்திலும் சமூக வலைத்தளத்திலும் உள்ள பழைய புகைப்படம் தான் என்பதையும் காணமுடிகிறது. 


இதிலிருந்து,  லாட்டரி சீட்டு விற்பனை செய்ததற்காக திருத்துறைப்பூண்டியில் 3 பேர் கைது செய்யப்பட்டது பழைய செய்தி அல்ல, சமீபத்திய செய்திதான், ஆனால் அதனை பதிவிடும் போது இணைக்கப்பட்ட புகைப்படம் பழைய புகைப்படம் தான். 


முடிவு:


லாட்டரி சீட்டு விற்பனை செய்ததற்காக திருத்துறைப்பூண்டியில் 3 பேர் கைது செய்யப்பட்டது பழைய செய்தி என்று தவெக சமூக ஊடக அணியினர் திரித்து தவறாக பரப்பி வருகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க