YouTurn

முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட சிங்கம் சிலையை எடிட் செய்து பரப்பும் நாதகவினர்!

முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட சிங்கம் சிலையை எடிட் செய்து பரப்பும் நாதகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

முதல்வர் ஸ்டாலினுக்கு மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 'சிங்கம் சிலை' பிரிசாக வழங்கப்பட்டது. இந்த புகைப்படத்தை போலியாக Edit செய்து ’பன்றி சிலை’ பரிசாக வழங்கப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.

பரவிய செய்தி

மு க ஸ்டாலினுக்கு  தெலுங்கர்கள் பன்றி சிலை வழங்குகிறார்கள் , ஏன் தெரியுமா நமது விஜயநகர  பன்றி கொடிய ஆட்சியை திராவிட மாடல் என்று உருட்டி  நீதானய்யா ஆளுகின்றீர்கள் 

தமிழனை ஏமாற்றி ஆள்வதில் நீங்கள் திறமைசாலி என்று பாராட்டி பன்றி சிலையை வழங்கி இருக்கின்றனர்

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கர்கள் பன்றி சிலை வழங்கியதாகவும், தமிழனை ஏமாற்றி ஆள்வதில் நீங்கள் திறமைசாலி என்று பாராட்டி பன்றி சிலை வழங்கியதாகவும் சன் நியூஸ் ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் நியூஸ் கார்ட் குறித்து சன் நியூஸின் சமூகவலைதளங்களில் பக்கங்களில் தேடி பார்த்தோம். அப்போது 21 ஜூன், 2025 அன்று சன் நியூஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'சிங்கம் சிலை' பரிசாக வழங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த நியூஸ் கார்டை தான் எடிட் செய்து, ’பன்றி சிலை’ பரிசாக வழங்கப்பட்டதாக தவறாக பரப்புகின்றனர். 


இது குறித்து News18 Tamil Nadu ஊடகமும் மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ‘சிங்கம் சிலை' பரிசாக வழங்கப்பட்டது என்று செய்தி வெளியிட்டுயிருந்ததை பார்க்கமுடிந்தது. 


அதே போல் செய்தி சோலை ஊடகப்பக்கத்தில், முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பயனளிக்க கூடிய வகையில் 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலினுக்கு சிங்கம் சிலை பரிசாக வழங்கப்பட்டது என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

image.png


முடிவு : 

முதல்வர் ஸ்டாலினுக்கு மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பரிசாக வழங்கப்பட்ட சிங்கம் சிலையை, எடிட் செய்து பன்றி சிலை பரிசாக வழங்கப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க