YouTurn

காய்ச்சி வைத்திருந்த சாராயத்தை குடித்த சிறுத்தையின் நிலைமை எனப் பரவும் தவறான தகவல் !

காய்ச்சி வைத்திருந்த சாராயத்தை குடித்த சிறுத்தையின் நிலைமை எனப் பரவும் தவறான தகவல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

காய்ச்சி வைக்கப்பட்டிருந்த சாராயத்தை குடித்துவிட்ட சிறுத்தையின் நிலைமையை பாருங்கள்

Twitter link | Archive link

விரிவான விளக்கம்

சிறுத்தைகளை கண்டால் அதைப் பிடிப்பதற்காக மக்கள் துரத்தும் காட்சிகளும், ஓடி ஒளிந்து கொள்ளும் காட்சிகளையே பார்த்து இருப்போம். ஆனால், அமைதியா நடந்து செல்லும் சிறுத்தையை மக்கள் தொட்டு விளையாடுவதும், செல்பி எடுத்துக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவுகளில், காய்ச்சி வைத்திருந்த சாராயத்தை குடித்ததால் சிறுத்தை இப்படி நடந்துக் கொண்டதாக பதிவிட்டு வருகின்றனர்.



உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2023 ஆகஸ்ட் 30ம் தேதி கெளதம் திரிவேதி என்பவரின் எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் மத்தியப் பிரதேசத்தின் இக்லேரா எனும் பகுதியில் நடந்ததாகவும், சிறுத்தையை வனத்துறையினர் மீட்டதாகவும் இடம்பெற்று இருக்கிறது.



X link

இதையடுத்து, பிடிஐ செய்தியின் எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில், சிறுத்தையை பிடிக்க உஜ்ஜயினியில் இருந்து ஓர் குழு வந்துக் கொண்டிருக்கிறது. உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி சிறுத்தை இடம் மாற்றப்படும் என வனத்துறை காவல் அதிகாரி பேசும் வீடியோ இடம்பெற்று இருக்கிறது.



X link 

சிறுத்தையின் நடவடிக்கை குறித்து மேற்கொண்டு தேடுகையில், என்டிடிவி, பைனான்சியல் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே உள்ளிட்ட செய்திகளில் சிறுத்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு இருக்கின்றனர்.



டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில், " சிறுத்தை சிகிச்சைக்காக இந்தூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. சிறுத்தை நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர் " எனக் கூறப்பட்டு இருக்கிறது.

சிறுத்தையின் நடவடிக்கையானது சாராயம் குடித்ததால் நிகழ்ந்ததாக வனத்துறை தரப்பிலோ அல்லது செய்திகளிலோ எங்கும் குறிப்பிடவில்லை. சிறுத்தை நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், காய்ச்சி வைக்கப்பட்டிருந்த சாராயத்தை குடித்துவிட்ட சிறுத்தையின் நிலைமை எனப் பரவும் தகவல் தவறானது. மத்தியப் பிரதேசத்தில் பிடிபட்ட சிறுத்தை நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க