YouTurn

தவெகவினர் நடந்த்திய போராட்டத்தில் பெண்கள் தரையில் அமர வைக்கப்பட்டனரா?

தவெகவினர் நடந்த்திய போராட்டத்தில் பெண்கள் தரையில் அமர வைக்கப்பட்டனரா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தவெகவினர் நடந்த்திய போராட்டத்தில் பெண்கள் தரையில் அமர வைக்கப்பட்டனரா?

பரவிய செய்தி

பெண்களை தரையில் அமர வைத்திருக்கும் TVK. ஒய்யாரமாக சேர் போட்டு உக்காந்து இருக்கும் ஆண்கள். Super Bro விஜய். 



X Link:


விரிவான விளக்கம்

இலங்கை கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கொல்லப்படுவதற்கு எதிராக, தவெகவினர் நடந்த்திய போராட்டத்தில், “ஆண்கள் இருக்கைகளில் அமர்ந்துக்கொண்டு, பெண்கள் அனைவரையும் தரையில் அமர வைத்து, பெண்கள் அவமதிக்கப்பட்டனர்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


தவெக போராட்டத்தில் பெண்கள் அவமதிக்கப்பட்டதாக பரப்பப்படும் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அப்படத்தில் பெண்கள் சிலர் இருக்கையில் அமர்ந்திருப்பதையும், ஆண்கள் சிலர் தரையில் அமர்ந்திருப்பதையும் தெளிவாகக் காண முடிந்தது



மேலும் இது குறித்து, தந்தி டிவி உள்ளிட்ட ஊடகங்களில் “தவெகவினரின் உண்ணாவிரத போராட்டம்” என்று குறிப்பிட்டு செய்தியும் வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.



அந்த ஊடகங்கள் வெளியிட்டிருந்த வீடியோக்களில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் இருக்கைகளிலும் தரையிலும் அமர்ந்திருப்பதை காண முடிகிறது. 


முடிவு: 


நம் தேடலில், தவெகவினர் நடந்த்திய போராட்டத்தில், “ஆண்கள் இருக்கைகளில் அமர்ந்துக்கொண்டு, பெண்கள் அனைவரையும் தரையில் அமர வைத்து, பெண்கள் அவமதிக்கப்பட்டனர்” என்று பரவும் செய்தி தவறானது என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.