YouTurn

விஜய் முதல்வராக பதவியேற்ற 62 நாட்களில் தமிழ்நாட்டில் மின்னணு ஏற்றுமதி வளர்ந்துள்ளதா? ‘Karnataka Times’ பரப்பும் பொய் செய்தி!

விஜய் முதல்வராக பதவியேற்ற 62 நாட்களில் தமிழ்நாட்டில் மின்னணு ஏற்றுமதி வளர்ந்துள்ளதா? ‘Karnataka Times’ பரப்பும் பொய் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2024-25 நிதியாண்டிலே இந்தியாவின் மொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41 சதவீதவாக இருந்திருக்கிறது.

பரவிய செய்தி

விஜய் முதல்வராக பதவியேற்ற 62 நாட்களில் இந்தியாவின் மொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 42 சதவீதத்தை தொட்டு, இந்தியாவிலே வேகமாக வளரும் ஏற்றுமதி மாநிலமாக தமிழ்நாடு  மாறியுள்ளது. 



Facebook Link 


விரிவான விளக்கம்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் தலைமையிலான தவெக கட்சி முதல்முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. தவெக தலைவர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டு 62 நாட்கள் மட்டும் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு இந்தியாவிலே வேகமாக வளரும் ஏற்றுமதி மாநிலமாக மாறியுள்ளதாகவும், தமிழ்நாட்டின் மின்னணு சாதன ஏற்றுமதி இந்தியாவின் மொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் 42 சதவீதமாக வளர்ந்துள்ளதாகவும் ‘Karnataka Times’ என்ற இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



உண்மை என்ன?


தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதியில் நிகழ்ந்துள்ள வளர்ச்சி குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ’DT Next’ செய்தித்தளத்தில் 2025 ஏப்ரல் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.



அதில், ’2023-24 நிதியாண்டில் 9.56 பில்லியன் டாலர்களாக இருந்த தமிழ்நாட்டின் மின்னணு சாதன ஏற்றுமதி 2024-25 நிதியாண்டில் 53 சதவீதம் வளர்ச்சி பெற்று 14.65 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாகவும்; இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41.23 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. 



THE NEW INDIAN EXPRESS’ செய்தித்தளத்தில் 2026 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் படி, ’மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாடு முந்தைய ஆண்டின் (2024-25) 14.65 பில்லியன் டாலர்களில் இருந்து 22.8 சதவீதம் வளர்ந்து 18 பில்லியன் டாலர்களாக உயரும்’ என்று அப்போதைய தொழிற்துறை அமைச்சர் TRB ராஜா கூறினார். 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, 2024-25 நிதியாண்டிலே இந்தியாவின் மொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41 சதவீதவாக இருந்திருப்பதை அறிய முடிகிறது. மேலும், மேற்கூறிய செய்திகளைப் போல் குறிப்பான நிதியாண்டு எதையும் குறிப்பிடாமல், இந்தியாவின் மொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாடு 42 சதவீதம் இருப்பதாக ’Karnataka Times’ செய்தி வெளியிட்டுள்ளது. 


முடிவு:


விஜய் முதல்வராக பதவியேற்ற 62 நாட்களில் இந்தியாவின் மொத்த மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 42 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பொய்யான செய்தியை ‘Karnataka Times’ ஊடகம் பரப்பிவருகிறது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க