YouTurn

இரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்னை வந்தாரா கலைஞர்? உண்மை என்ன?

இரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்னை வந்தாரா கலைஞர்? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கலைஞர் முதன்முதலில் சென்னை வரும்போது இரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்ததாகப் பல ஆண்டுகளாக அரசியல் தளத்தில் சொல்லப்படுவதுண்டு. இது ஒரு பொய் பிரச்சாரம்.

பரவிய செய்தி

கருணாநிதி ரயிலில் டிக்கெட் எடுக்காமல் without-ல் சென்னை வந்தவர்.

X link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் முதன்முதலில் சென்னைக்கு வரும்போது ரயிலில் டிக்கெட் எடுக்காமல் without-ல் வந்ததாக நீண்டகாலமாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுவதுண்டு. 

இதே விஷயத்தை தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வெற்றியாளர் பாலாஜி முருகதாசும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கான ஆதாரம் ’கண்ணதாசன் சுயசரிதை வனவாசம்’ என்ற புத்தகத்தில் இருப்பதாக மற்றொரு பதிவில்  குறிப்பிட்டுள்ளார். 


அதில், “அடுத்த நாளே அவன் சென்னைக்கு ரயிலேறிவிட்டான் 'டிக்கட்' இல்லாமல் ரயிலில் பிரயாணம் செய்வது தவறு என்பது அவனுக்கும் தெரியும். அவனிடம்தான் பண மில்லையே, அவன் என்ன செய்வான்? ரயிலின் அவனும் ஏறி உட்கார்ந்து கொண்டான்” என்றுள்ளது. அப்புத்தகத்தில் அவன் என்று குறிப்பிட்டுள்ளது கலைஞரைத்தான் என பாலாஜி கூறுகிறார்.

உண்மை என்ன?

கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகத்தில் ’என்னுரை’ பகுதியை கண்ணதாசன் தான் எழுதியுள்ளார். அதில் (பக்கம்.5), “நான் நடந்துவந்த பாதை, தனி வாழ்வில் நான் பட்ட துயரங்கள், இவையெல்லாம் ஒரு கதைபோல இருப்பதாக நான் கருதினேன். ஆகவே, வேறு கதாபாத்திரங்களை உற்பத்தி செய்து கதை எழுதுவதைவிட, என்னையே பாத்திரமாக்கி உண்மையைக் கதை வடிவில் சொல்ல நான் விரும்பினேன். அந்த முயற்சியே இந்த நூலாக எழுந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். 

kalaignar train ticket


அதாவது தனது சொந்த வாழ்க்கை பற்றிக் கதை வடிவில் எழுதியதாகவே கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார். 

அது மட்டுமின்றி 6-வது பக்கத்தில், “ ’நான்’ என்று எழுதுவதற்குத் தகுதி போதாது என்ற தன்னடக்கத்துடனேயே ’அவன்’ என்று என்னைக் குறிப்பிட்டேன்” என்று கூறியுள்ளார். அதாவது தன்னைத்தானே மூன்றாம் நபரை குறிப்பிடுவதுபோல் ’அவன் வந்தான், அவன் சென்றான்’ எனப் புத்தகத்தில் எழுதி இருப்பதாக கூறியுள்ளார். 

மேற்கண்ட ஆதாரங்களில் இருந்துதான் டிக்கெட் எடுக்காமல் இரயிலில் சென்னை வந்தது பற்றியே கண்ணதாசன் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறியமுடிகிறது. ஆனால், இது கலைஞர் எனப் பல ஆண்டுகளாக அரசியல்வாதிகளால் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது

முடிவு: 

இரயிலில் டிக்கெட் எடுக்காமல் கலைஞர் சென்னை வந்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. கண்ணதாசன் தனது வனவாசம் என்ற புத்தகத்தில் தான் டிக்கெட் எடுக்காமல் சென்னை வந்ததாகவே குறிப்பிட்டுள்ளார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க