YouTurn

அண்ணா நூலகத்தின் அரங்குகளின் வாடகையை தவெக அரசு உயர்த்தியதாக தவறான செய்தி வெளியிட்ட ‘கலைஞர் செய்திகள்’!

அண்ணா நூலகத்தின் அரங்குகளின் வாடகையை தவெக அரசு உயர்த்தியதாக தவறான செய்தி வெளியிட்ட ‘கலைஞர் செய்திகள்’!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வாடகைக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது.

பரவிய செய்தி

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது த.வெ.க அரசு!


image.png


Link / Archive Link


விரிவான விளக்கம்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நூற்றாண்டு நூலகத்தில் கலையரங்கம், கருத்தரங்கக் கூட்டம் நடத்தும் அறை, திறந்தவெளி அரங்கம், புத்தக வெளியிட்டு விழா நடத்தும் அறை ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. தவெக அரசு புதிதாக ஆட்சிப்பேறுற்ற பிறகு அண்ணா நூலகத்தின் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ள நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தி 5 லட்சம் வரை நிர்ணயித்து இருப்பதாக ‘கலைஞர் செய்திகள்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.



உண்மை என்ன?


’அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்’ உள்ள அரங்கங்களின் வாடகை குறித்து அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலே தேடினோம்.


அதில், 1280 இருக்கைகள் கொண்ட கலையரங்கத்தின் (Auditorium) ஒருநாள் வாடகை 2,31,224 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், 200 இருக்கைகள் கொண்ட கருத்தரங்கக் கூடத்தின் (Conference Hall) ஒருநாள் வாடகை 7,637 ரூபாய் மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 150 இருக்கைகள் கொண்ட  புத்தக வெளியிட்டுக் கூடத்தின் ஒருநாள் வாடகை 2,264 ரூபாய் மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகத்தை (Administrative Office) ‘You Turn’ தரப்பில் இருந்து தொடர்புகொண்டு பேசினோம். "கலையரங்கம், புத்தக வெளியீட்டுக் கூடம்,  கருத்தரங்கக் கூடம் மற்றும் திறந்தவெளி அரங்கம் ஆகியவற்றின் வாடகைக் கட்டணத்தில் இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மேற்கண்ட அரங்குகளுக்கு எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை" என்று நிர்வாகத்தின் தரப்பில் சொல்லப்பட்டது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அரங்கங்களை பயன்படுத்துவதற்கான வாடகைக் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தி தவறானது என்பது தெரியவருகிறது.


முடிவு:


அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அரங்கங்களை பயன்படுத்துவதற்கான வாடகைக் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டதாக ‘கலைஞர் செய்திகள்’ ஊடகம் வெளியிடப்பட்ட செய்தி தவறானது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க