யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் செங்கோல் மற்றும் வாள் கொடுத்து கௌரவித்தார் கே.என்.நேரு.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
திமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மேடையில் உதயநிதி நின்றுகொண்டிருக்க, ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோருக்கு அமைச்சர் கே.என்.நேரு சால்வை அணிவிக்கிறார். ஆனால் உதயநிதிக்கு அணிவிக்கவில்லை. இந்த சில நொடி காட்சியை கொண்டு, கே.என்.நேரு உதயநிதியை மேடையிலே புறக்கணித்ததாகவும், திமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாகிவிட்டதாகவும் தவெகவைச் சேர்ந்தவர் பரப்பி வருகிறார்.
நேரு vs உதயநிதி மோதல்? வேடிக்கும் உட்கட்சி பூசல்! அதிகார மோதல் pic.twitter.com/9Z9pxJ9Fwx
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’புதிய தலைமுறை’ வெளியிட்டிருந்த செய்தியைக் காணமுடிந்தது.
முதல்வர், துணை முதல்வர் இருவருக்கும்.. செங்கோல், வாள் கொடுத்த கே.என்.நேரு, அன்பில் மகேஸ்#DMK | #MKStalin | #Trichy | #TrichyDMKManadu | #DMKManadu | #Election2026 | #ElectionWithPT pic.twitter.com/iyNmMZzEEq
அதன்படி, திமுகவின் மாநாடு திருச்சி சிறுகனூரில் கடந்த மார்ச் 09ஆம் தேதி நடந்துள்ளது. அதில், அமைச்சர்கள் கே.என்.நேருவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் செங்கோல் மற்றும் வாள் கொடுத்து கௌரவித்தனர். அதன்பின்னர் தான் மேடையில் இருந்த மற்ற திமுக பிரமுகர்களுக்கு சால்வை அணித்து வரவேற்றனர் என்பதை இந்த செய்தியில் தெளிவாக காணமுடிகிறது.
இதிலிருந்து, ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு அமைச்சர் கே.என்.நேரு செங்கோல் வழங்கிய காட்சியை நீக்கிவிட்டு, மாநாட்டு மேடையில் மற்ற திமுக பிரமுகர்களுக்கு சால்வை அணிவித்த காட்சியை மட்டும் பதிவிட்டு உண்மை செய்தியை திரித்து பரப்புகிறார்கள் என்பதைக் காணமுடிகிறது.
முடிவு:
உதயநிதிக்கு அமைச்சர் கே.என்.நேரு செங்கோல் வழங்கும் காட்சியை நீக்கிவிட்டு, உதயநிதியை அமைச்சர் கே.என்.நேரு புறக்கணித்தாக திரிக்கப்பட்ட தகவலை தவெகவினர் பரப்புகிறார்கள்.