YouTurn

சமூகநீதி விடுதிகளில் முட்டை, இறைச்சி வழங்கும் புதிய திட்டத்தை தவெக அரசு கொண்டுவந்திருக்கிறதா?

சமூகநீதி விடுதிகளில் முட்டை, இறைச்சி வழங்கும் புதிய திட்டத்தை தவெக அரசு கொண்டுவந்திருக்கிறதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2023ஆம் ஆண்டிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக சமூகநீதி விடுதிகளில் வாரத்திற்கு 5 நாட்கள் முட்டையும், ஒரு நாள் இறைச்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

பரவிய செய்தி

அரசு விடுதி மாணவர்களுக்கு இனி Non Veg கட்டாயம் ! முதலமைச்சரின் அதிரடி உத்தரவு ! 

#CMVijay #TNAssembly #HostelFood #NonVeg 


image.png


Link / Archive Link 


விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் கணிசமான மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படிக்கிறார்கள். அவர்களுக்காக ஆதி திராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகியவற்றின் சார்பில் சமூகநீதி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 


இந்த சமூகநீதி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் மட்டன், ஒரு நாள் சிக்கன், 5 நாட்கள் முட்டை வழங்கவேண்டும் என்று முதல்வர் விஜய் புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தவெக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


அரசு பள்ளி விடுதிகளில் முட்டை, இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் வழங்கப்படுவது குறித்த தகவல்களைத் தேடினோம். ‘பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை’யின் சார்பாக 2024-25ஆம் நிதியாண்டில் வெளியிடப்பட்டிருந்த ஆவணம் ஒன்றைக் காணமுடிந்தது.


image.png


அதன்படி, ’பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 2022 மார்ச் மாதம் ஒரு அரச்சாணையையும், 2023 அக்டோபர் மாதம் மற்றொரு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது’ தெரிவருவருகிறது.  அந்த அரசாணைகளின் படி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக நடந்தப்படும் சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் முட்டை என மாதத்திற்கு 20 நாட்கள் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வாரத்திற்கு ஒரு நாள் புதன்கிழமையன்று கோழி இறைச்சி அல்லது ஆட்டு இறைச்சியும் வழங்கப்பட்டு வருகிறது.



இதிலிருந்து, 2023ஆம் ஆண்டிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக சமூகநீதி விடுதிகளில்  வாரத்திற்கு 5 நாட்கள் முட்டையும், ஒரு நாள் இறைச்சியும்  வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிகிறது. 


முடிவு:


சமூகநீதி விடுதிகளில்  முட்டை, இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் வழங்கப்படுவது கடந்த மூன்றாண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது என்பதை மறைத்து, தவெக அரசால் இந்த திட்டம் புதிதாக அறிவிக்கப்பட்டது போல் தவறான தகவலை பரப்புகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க