யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு 25 லட்சம் முதல் ஒரு கோடி வரை நிவாரணம் வழங்கப்பட்டதற்கான செய்தி ஆதாரங்கள் இருக்கின்றன.
பரவிய செய்தி
திமுக, அதிமுக ஆட்சியில் பணியில் இருக்கும் போது காவலர்கள் உயிரிழந்தால் ஒரு லட்சமும், காயமடைந்தால் 50 ஆயிரம் மட்டுமே நிவாரண நிதியாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தவெக ஆட்சியில் பணியில் உயிரிழந்த காவலருக்கு 30 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படுகிறது.

விரிவான விளக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் பணியிலிருந்த தலைமை காவலர் மகேஷ்குமார், மணற்கொள்ளையில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வரும்போது அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த காவலருக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
இந்த செய்தியை பதிவிட்டு, ’முந்தைய திமுக, அதிமுக ஆட்சியில் பணியில் இருக்கும்போது காவலர்கள் உயிரிழந்தால் ஒரு லட்சமும், காயமடைந்தால் 50 ஆயிரம் மட்டுமே நிவாரண நிதியாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தவெக ஆட்சியில் பணியில் உயிரிழந்த காவலருக்கு 30 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படுகிறது’ தவெக ஆதரவாளரால் பரப்பப்படுகிறது.
Onnu gavanichingala?
DMK, ADMK aatchi la ipdi yarachum death aana 1L nivaranam adi patta 50K tharuvanga, ana namma aatchi 30L, 40L thararu..
Avaru sonna mari kollai adika arasiyaluku varalandrdhu idhulaye theriudhu! 👌 pic.twitter.com/SoavuUjAUs
உண்மை என்ன?
அதிமுக மற்றும் திமுக ஆட்சி செய்த ஆண்டுகளில் பணியில் இருக்கும்போது வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்த காவலர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதி பற்றிய விவரங்களைத் தேடினோம்.
ரூ.1 கோடி நிதியுதவி!#Udumalai | #Tiruppur | #SubInspector pic.twitter.com/2DrLHiCoDM
2025 ஆகஸ்ட் மாதம் ‘புதிய தலைமுறை’ ஊடகத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியின் படி, ‘திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்தினருக்கு அப்போது முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்தது’ தெரியவருகிறது.
2024 அக்டோபர் மாதம் ‘புதிய தலைமுறை’ வெளியிட்டுள்ள செய்தியில், ‘விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டிற்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் சத்தியமூர்த்தி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு அப்போதைய முதல்வர் ஸ்டாலின் 25 லட்சம் நிவாரண உதவி அறிவித்தார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், 2020 ஆகஸ்ட் மாதம் ’Deccan Herald’ செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின்படி, ’சுப்பிரமணியன் என்கிற சிறப்பு படை காவலர் சரித்திர பதிவேடு ரௌடியை கைது செய்ய போன போது, அந்த ரௌடியால் குண்டு வீசிக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி 50 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார்’ என்று தெரிய வருகிறது.
இதிலிருந்து திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு 25 லட்சம் முதல் ஒரு கோடி வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.
முடிவு:
திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு வெறும் ஒரு லட்சம் மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டதாக தவெக ஆதரவாளர்களால் தவறாக பரப்புகிறார்கள்.