YouTurn

விவாத நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி அடிவாங்கியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

விவாத நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி அடிவாங்கியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோவில் ஒருவருக்கொருவர் தாக்கிகொள்வது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள்.

பரவிய செய்தி

வெளி மாநில செய்தி சேனலில் அடிவாங்கிய திமுக நிர்வாகி


image.png

Link / Archive Link

விரிவான விளக்கம்

ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேச்சாளர்களாக கலந்துகொண்டிருந்த இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் சிறிய பதிவிட்டு, ‘வெளிமாநில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்டதாக’ தவெக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், ‘Loksatta’ என்ற மராத்தி செய்தித்தளத்தில் இது குறித்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், ’YO YO TV என்ற தெலுங்கு செய்தித்தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் ஒருவொரு ஒருவர் தாக்கிக் கொண்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. விவாத நிகழ்ச்சியில் அவர்கள் அணிந்திருக்கும் துண்டுகளில் உள்ள நிறங்களிலிருந்தே அவர்கள் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் என்பது தெரிகிறது. 


பரப்பப்படும் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள Time Frame கொண்டு பார்க்கும் போது இந்த நிகழ்வு நவம்பர் 18ஆம் தேதியன்று இரவு 7.45க்கு நடந்ததாக தெரிகிறது. 


image.png


இதே செய்தியை ’ABP நாடு’ செய்தித்தளமும் வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், பீகார் மாநிலத்தில் பாஜக வெற்றிபெற்றதற்கு வாக்குத் திருட்டே காரணம் என்று காங்கிரஸ் பேச்சாளர் கூறினார். பாஜக தரப்பில் பேசிய நபர் இதனை மறுத்து ’நீதி வென்றது’ என்று கூறியதும் காங்கிரஸ் பேச்சாளர் மேசை மீது ஓங்கி அடிக்கிறார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பாஜக பேச்சாளர்கள் ஒருவரை தாக்கிக்கொள்கிறார்கள்’ என்று தெரிய வருகிறது. 


இதிலிருந்து, இந்த வீடியோவில் ஒருவருக்கொருவர் தாக்கிகொள்வது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 


முடிவு:


காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிகொள்ளும் வீடியோவை, திமுக நிர்வாகி வேறு மாநில விவாத நிகழ்ச்சியில் அடிவாங்குவதாக தவறாக பரப்பப்படுகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.