YouTurn

ஷோபா சந்திரசேகர் அமர் பிரசாத் ரெட்டி சந்திப்பு எனப் பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

ஷோபா சந்திரசேகர் அமர் பிரசாத் ரெட்டி சந்திப்பு எனப் பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய புகைப்படம்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தப் புகைப்படம் இரண்டு ஆண்டுகள் பழையது. அதாவது தவெக கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

விஜய்யை காப்பாற்ற சொல்லி அமர் பிரசாந்த் ரெட்டி காலில் விழுந்த விஜயின் தாய் ஷோபா. குடும்பமே பாஜக காலடில தான் கிடக்கு போல.


 

X Link / Archive Link

விரிவான விளக்கம்

கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்-ன் பிரச்சார பயணக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க முதலில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைத்தது. இதனை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

 

இதனைத் தொடர்ந்து, தவெக-க்கு பாஜக உதவி செய்கிறது. அதனால் தான் உச்ச நீதிமன்றம் தவெக-விற்கு சாதகமாக சிபிஜ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்ற கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

 

இந்நிலையில், விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர் பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டியுடன் நிற்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, கரூர் வழக்கிலிருந்து விஜய்யை காப்பாற்ற சொல்லி பாஜகவிடம் கோரிக்கைவே இந்த சந்திப்பு நடந்ததாக பரப்பப்படுகிறது.


 

உண்மை என்ன?

 

பரப்பப்படும் இந்த புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடியபோது, தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டியின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் இந்த புகைப்படத்தை காணமுடிந்தது.


 

அதில் இந்த புகைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவிடப்பட்டிருப்பதை காணமுடிகிறது.

 

இதிலிருந்து, இது இரண்டு ஆண்டுகள் பழைய  புகைப்படம் என்பது தெரியவருகிறது. அதாவது இந்த புகைப்படம் தவெக கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

 

முடிவு:

 

இரண்டாண்டுகள் பழைய புகைப்படத்தை பதிவிட்டு, கரூர்  வழக்கு தொடர்பாக விஜய்-ன் அம்மா ஷோபா சந்திரசேகர் பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டியை சந்தித்ததாக தவறாக பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.