YouTurn

உத்தரப்பிரதேச தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களின் புகைப்படமா இது? உண்மை என்ன?

உத்தரப்பிரதேச தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களின் புகைப்படமா இது? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் புகைப்படத்திற்கும், சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஆயுதங்கள் தயாரித்த நபர் கைது செய்யப்பட்ட செய்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பரவிய செய்தி

இவ்வளவு தளவாடங்களும் லக்னோவில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. தேசவிரோதிகளுக்கு சிம்ம சொத்தனமாக விளங்கும் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச தலைநகரிலேயே இவ்வளவு குண்டுகள் என்றால், மற்ற மாநிலங்களில் நிலையை யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். 


Facebook Link:

விரிவான விளக்கம்

உத்தரப்பிரதேச தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயதங்களின் புகைப்படம் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் புகைப்படத்தில் ஒரு அறை நிறைய துப்பாக்கிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது. 



#लखनऊ के हकीम #सलाहुद्दीन के घर से 3000 बंदूकें और
50 हजार गोलियों की मैगजीन बरामद हुई है....
सोचिये ये लोग कहाँ तक तैयारी करके बैठे हैं और
आपको ब्राह्मण-यादव लड़ाई में उलझाया जा रहा है। pic.twitter.com/UOVWtSdhbR

— S N Singh (@snsinghbjp) June 30, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், லக்னோவில் ஆயுதங்களை தயாரித்தது மட்டுமல்லாமல், காஷ்மீர் வரை அவற்றைக் கடத்துவதிலும் ஈடுபட்ட ஹக்கீம் சலாவுதீன் என்ற நபர் கைது செய்யப்பட்டது குறித்து “Free Press Journal” ஊடகப் பக்கத்தில் ஜூன் 28 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. 



எனவே உத்தரப்பிரதேசத்தில் ஆயுதங்கள் தயாரித்த நபர் கைது செய்யப்பட்டது உண்மையே என்பதை அறிய முடிந்தது. 


மேலும் பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் இந்த புகைப்படம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது என்று கூறி எட்டு ஆண்டுகளுக்கு முன்பே “Wisgoon” தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. 



இதன் மூலம், பரவி வரும் புகைப்படத்திற்கும், சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஆயுதங்கள் தயாரித்த நபர் கைது செய்யப்பட்ட செய்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிறது. 


முடிவு: 


நம் தேடலில், உத்தரப்பிரதேச தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களின் புகைப்படம் என்று கூறி பரவும் புகைப்படம் கடந்த 2017-ல் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம். இதற்கும் சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஆயுதங்கள் தயாரித்த நபர் கைது செய்யப்பட்ட செய்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க