YouTurn

தமிழ்நாட்டில் குப்பைக்களுக்கான வரியை திமுக தான் கொண்டுவந்ததா? உண்மை என்ன?

தமிழ்நாட்டில் குப்பைக்களுக்கான வரியை திமுக தான் கொண்டுவந்ததா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது அதிமுக ஆட்சியிலே அமலில் இருந்துள்ளது. மேலும், இந்த கட்டண வசூல் கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும் அமலில் இருக்கிறது.

பரவிய செய்தி

“இந்தியாவிலேயே குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசு திமுக அரசு” - எடப்பாடி பழனிசாமி


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்சார சுற்​றுப்​பயணத்தை அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு சுற்றுப்பயணத்தின் போது, “இந்தியாவிலேயே குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசு திமுக அரசு” என்று அவர் பேசிய வீடியோவை அதிமுக-வின் தகவல் தொழில்நுட்ப அணி சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறது.

உண்மை என்ன?


இது தொடர்பாக ‘Garbage Tax in Tamilnadu’ என்ற  keywords கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘The hindu’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 2020 டிசம்பர் 23ஆம் தேதியன்று வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியில், ’2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சியில் குடியிருப்பவர்கள், வணிகர்கள் திடக்கழிவு மேலாண்மைக்காக மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது ’திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் - 2019’-ன் அடிப்படையில் கொண்டு வரப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


இது குறித்து மேலும் தேடியதில் ‘இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியில், ‘மதுரையில் வீடுகளில் மற்றும் தொழில் இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைக்கு வரி விதிக்கும் நடைமுறை 2017ஆம் ஆண்டிலே அமலாகியுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் குப்பைகள் தரம் பிரித்து சேகரிப்பட்டு உரம், இயற்கை எரிபொருள் ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதற்கென அதிகமாக செலவுகள் ஏற்படுவதால் இவ்வாறு வரி விதிக்கப்படுவதாக அப்போது காரணம் சொல்லப்பட்டது. 


image.png


மேலும், பிற மாநிலங்களில் இவ்வாறு கழிவு மேலாண்மைக்காக மாநகராட்சியால் கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி தேடுகையில், கர்நாடக மாநிலத்தில் மைசூர், பெங்களூரு ஆகிய மாநகராட்சியில், 2025ஆம் ஆண்டிலிருந்து இந்த கட்டண வசூல் அமலுக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


image.png


மேற்கூறிய விவரங்களிலிருந்து, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது அதிமுக ஆட்சியிலே அமலுக்கு வந்துள்ளது தெரியவருகிறது. மேலும், இந்த கட்டண வசூல் கர்நாடகா போன்ற பிற மாநிலத்திலும் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


முடிவு:


அதிமுக ஆட்சிக் காலத்திலிருந்தே (2017), தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைக்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை அமல்படுத்திய ஒரே அரசு திமுக அரசு தான் என்று தவறான தகவலை மக்கள் மத்தியில் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.