YouTurn

இந்தியாவிற்கு எதிராக வங்கதேச கொடியுடன் இருந்தவருக்கு நடந்த சம்பவம் எனப் பரவும் வீடியோ! உண்மை என்ன? 

இந்தியாவிற்கு எதிராக வங்கதேச கொடியுடன் இருந்தவருக்கு நடந்த சம்பவம் எனப் பரவும் வீடியோ! உண்மை என்ன? 

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வங்கதேசத்தில் நடந்த சம்பவத்தை, கல்கத்தாவில் இந்தியாவுக்கு எதிராக கூச்சலிட்டு வங்கதேச கொடியை விற்பனை செய்தவரை தாக்கிய சம்பவம் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

இந்தியாவுக்கு எதிராக கூச்சலிட்டு பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவர்களை வெளுதெடுத்த எல்லையோர பாதுகாப்புப் படை வீரருக்கு ராயல் சல்யூட் ..!

X Link | Archive Link

விரிவான விளக்கம்

கொல்கத்தாவில் இந்தியாவுக்கு எதிராக கூச்சலிட்டு வங்கதேச கொடியை விற்பனை செய்த இஸ்லாமியரை எல்லையோர பாதுகாப்பு படையினர் தாக்குவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


வீடியோவில் வங்கதேச கொடியுடன் இருக்கும் ஒருவர் மீது, ராணுவ வீரர் தடியடி நடத்துவதை காண முடிகிறது. 


#WestBengal pic.twitter.com/XiWtvhgGaA

— TNBJP SOCIAL MEDIA INFLUENCERS(மோடியின் குடும்பம்) (@tnbjpsm) June 14, 2025



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது கொல்கத்தாவில் நடந்த சம்பவம் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


Dhaka Post“ ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு, இது வங்கதேசத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறி ஜூன் 12 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர்.



இது குறித்து மேலும் தேடியதில், “Kalbela” ஊடகப் பக்கத்தில், கடந்த வாரம் டாக்காவில் உள்ள தேசிய மைதானத்தில் வங்கதேசம் மற்றும் சிங்கப்பூருக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் தடியடி நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்நிலையில் சம்பவ இடத்தில், வங்கதேச கொடியை விற்பனை செய்த ஒருவரை ராணுவ வீரர் தவறுதலாக தடியடி நடத்தியதற்கு மன்னிப்பு கோரி, வங்கதேச ராணுவம் தற்போது பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் டாக்கா நஷ்டஈடு கொடுத்துள்ளது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.



இது வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான் என்பதை, “Jugantor” ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் மூலமும் உறுதிபடுத்த முடிகிறது. 


முடிவு: 


நம் தேடலில், வங்கதேசத்தில் நடந்த சம்பவத்தை, கல்கத்தாவில் இந்தியாவுக்கு எதிராக கூச்சலிட்டு வங்கதேச கொடியை விற்பனை செய்தவரை தாக்கிய சம்பவம் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க