யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற சம்பவத்தை, தற்போது தமிழ்நாட்டில் நடந்திருப்பது போல் பரப்பப்பட்டு வருகிறது.
பரவிய செய்தி
சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டின் அப்பா வளர்ப்பில் பள்ளி பிள்ளைகள் கஞ்சா போதையில் ஆனந்தமாய் ஆடி பாடி மகிழ்ந்து வருகின்றனர்.

விரிவான விளக்கம்
சீருடையுடன் மாணவர்கள் சிலர் பிரம்பால் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் மோதிக்கொண்டதாக குறிப்பிட்டு பரப்பப்பட்டு வருகின்றன.

உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவில் வரும் காட்சியை கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், 2024 செப்டம்பரிலிருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.
அப்போது இது குறித்து 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி INIDAN EXPRESS TAMIL இணையதளத்தில் செய்தி வெளியிட்டுயிருந்தது. அந்த செய்தியில் புதுச்சேரி அடுத்த அரியூரில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, ஒருவரை ஒருவர் விறகு கட்டை எடுத்து சரமாரியாக தாக்கிக்கொண்டதாக குறிப்பிடப்படுள்ளது.

மேலும் இது குறித்து வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்று தேடி பார்க்கையில், கடந்தாண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி தந்தி டிவியின் யூடியூப் பக்கத்திலும், ரவுடிகளை போல பள்ளி மாணவர்கள் -கொலை வெறி தாக்குதல்- ஊரே நின்று வேடிக்கை பார்த்த காட்சி என்ற தலைப்பிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதே போல் மாணவர்கள் சண்டைப்போடும் பகுதியில் உள்ள சுவற்றில் புதுச்சேரி என்று எழுதியிருந்ததையும் காணமுடிந்தது.
முடிவு :
நம் தேடலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்டதாக பரப்பப்படும் செய்தி, 2024ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடந்தது உறுதியானது.