யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது. உண்மையான நியூஸ்கார்டில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்“ என்று குறிப்பிட்டு தான் ‘சன் நியூஸ்’ தனது பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
“தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன்” என்று குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய பதாகை கொண்ட நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சன் நியூஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த நியூஸ் கார்டில் மதுரையில் எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ்கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது உண்மையான நியூஸ்கார்டு அல்ல என்பதை அறிய முடிந்தது.
‘DMK IT Wing” ஊடகப் பக்கத்தில் பரவி வரும் நியூஸ்கார்டில் உள்ள அதே புகைப்படத்துடன் “மண் - மொழி - மானம் காக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் "தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்" என உறுதிமொழியை முழங்கியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் உறுதிமொழி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது“ என்று குறிப்பிட்டு கடந்த செப்டம்பர் 15 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் புகைப்படத்தில், “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்“ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
மண் - மொழி - மானம் காக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் "தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்" என உறுதிமொழியை முழங்கியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் உறுதிமொழி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
#ஓரணியில்தமிழ்நாடு எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தி @DMKITwing Tag… pic.twitter.com/GL37KHz94O
அந்த பதாகை முன்பு Selfie எடுத்து
இதே போன்று, ‘சன் நியூஸ்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நியூஸ் கார்டிலும், “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்“ என்ற உறுதிமொழியைக் குறிப்பிட்டே பதாகை இடம்பெற்றிருந்தது.
#அரசியல்Post | ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற வரிகளுடன் மதுரையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.#SunNews | #Madurai pic.twitter.com/Y7PrpX0U6H
இந்நிலையில் உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து, “தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாகக் குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர்.

முடிவு:
நம் தேடலில், “தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவாகிறது.