YouTurn

இருட்டில் நடந்ததா திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்? இந்து முன்னணியின் பொய் தகவல்!

இருட்டில் நடந்ததா திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்? இந்து முன்னணியின் பொய் தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் அதிகாலை 5.31 மணியளவில் நடந்தது, அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பரவிய செய்தி

இருட்டில் நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்..

ஏழைகளுக்கு இல்லை அனுமதி!!


திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிட,

பக்தர்களே திரண்டு வாரீர்!


image.png


X Link / Archive Link 


விரிவான விளக்கம்

14 ஆண்டுகளுக்குப் பின்பு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 14ஆம் தேதி நடத்தப்பட்டது. 


ஆனால் இந்த விழா நடந்து நான்கு மாதங்கள் கழித்து, ஒருவரிடம் பேட்டி எடுக்கப்பட்ட சிறிய காணொளியை பதிவிட்டு ’இந்த கும்பாபிஷேகம் இருட்டில் நடந்தப்பட்டது என்றும் அங்கே ஒரு சில பணக்காரர்களைத் தவிர ஏழை மக்கள் அனுமதிக்கப்படவில்லை’ என்றும் இந்து முன்னணி தனது அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ பக்கத்தில் பரப்பிவருகிறது. 


உண்மை என்ன?


திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் குறித்து இணையத்தில் தேடியபோது, ’தந்தி டிவி’ செய்தித் தொலைகாட்சியின் யூட்யூப் பக்கத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது.  2025, ஜூலை 14ஆம் தேதி ’திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம் - 2025’ என்று தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்த அந்த வீடியோவில், இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதை காணமுடிகிறது.


image.png


மேலும் தேடியதில், ’இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் 2025 ஜூலை 14ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தியைக் காணமுடிகிறது. அதன்படி, ஜூலை 14ஆம் தேதி அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றதாக தெரியவருகிறது. 



இந்த கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதாகவும், பக்தர்கள் விழாவைக் காணும் வகையில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டதாகவும்,  3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்றும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆயிரக்​கணக்​கானோருக்கு அன்​ன​தானம் வழங்​கப்​பட்​டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேற்கூறிய செய்தி ஆதாரங்களிலிருந்து, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் அதிகாலை 5.31 மணியளவில் நடந்தது என்றும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதும் உறுதியாகிறது. 


முடிவு:


திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் இருட்டில் நடந்ததாகவும், அதனைக் காண ஏழை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் ’இந்து முன்னணி’ பொய்யான தகவலை பரப்பி வருகிறது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க