யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சுதந்திரம் அடைந்ததாக அறிவித்து இந்திய கொடிகளுடன் ஊர்வலமாகச் செல்லும் பலுசிஸ்தான் மக்கள் என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ, குஜராத்தில் எடுக்கப்பட்டது. இதை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
பாகிஸ்தானில் இருந்து பிரிந்த பலூச் சுகந்திரம் அடைந்ததாக அறிவித்து இந்திய கொடிகளுடன் ஊர்வலமாகச் சென்றனர். இதுதான் அகண்ட பாரதம்.
விரிவான விளக்கம்
பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நிலையில், "இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாக குறிப்பிட வேண்டாம். நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, நாங்கள் பலுசிஸ்தானியர்கள். பலுசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க இந்தியா அனுமதி தர வேண்டும்" என்று குறிப்பிட்டு பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலூச் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், “பாகிஸ்தானில் இருந்து பிரிந்த பலுசிஸ்தான்.. சுதந்திரம் அடைந்ததாக அறிவித்து இந்திய கொடிகளுடன் ஊர்வலமாகச் செல்லும் அந்நாட்டு மக்கள்..” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து பிரிந்த பலூச் சுகந்திரம் அடைந்ததாக அறிவித்து இந்திய கொடிகளுடன் ஊர்வலமாகச் சென்றனர் இதுதான் அகண்ட பாரதம் pic.twitter.com/7DGLdWcFHL
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது பலுசிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
“Mumineenexpo” இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பரவி வரும் வீடியோ “குஜராத் மாநிலம், சூரத் நகரத்தில் நடைபெற்ற திரங்கா (மூவர்ணக்கொடி) யாத்திரையில் தாவூதி போஹ்ரா என்ற பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களின் ஊர்வலத்தில் பேண்டு வாத்தியம் வாசித்த போது எடுக்கப்பட்டது” என்று குறிப்பிட்டு மே 19 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இதே போன்று, “News18 Gujarati“ ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும், ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கடந்த மே 14 ஆம் தேதியன்று குஜராத் மாநிலம், சூரத் நகரத்தில் நடைபெற்ற திரங்கா யாத்திரை என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோவில் இருப்பது போன்றே காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், “surat_urban_news” இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பரவி வரும் வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்தனர்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
முடிவு:
நம் தேடலில், சுதந்திரம் அடைந்ததாக அறிவித்து இந்திய கொடிகளுடன் ஊர்வலமாகச் செல்லும் பலுசிஸ்தான் மக்கள் என்று குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ, குஜராத்தில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்யமுடிகிறது.