YouTurn

சென்னையில் வெள்ளம் என்று பரவும் குஜராத் புகைப்படம்!

சென்னையில் வெள்ளம் என்று பரவும் குஜராத் புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை. தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

இது இந்தோனேஷியா அருகில் இருக்கும் புற மாநகர் பகுதி...

இத யாருக்கெட்டாலும் நான் அப்புடித்தான் சொல்றேன்.. #4000கோடி_என்னாச்சு

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

வங்கக் கடலில் நவம்பர் 27 ஆம் தேதி உருவான டிட்வா புயலினால், சென்னையில் கடந்த  வாரம் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் மழையால் சென்னை வெள்ளம் வந்ததாகவும், இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்ததாகவும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது The Hindu ஊடகத்தில் “Heavy rains in Gujarat; over 600 people shifted to safe places” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 26, 2024 அன்று பரவி வரும் புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் அந்த புகைப்படத்திற்கு கீழே குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பெய்த கனமழைக்குப் பிறகு, வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி சாலையைக் கடந்து செல்கின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து மேலும் தேடிய போது, Telegraph India ஊடகத்தில் “Monsoon misery: Rains spell woe from Gujarat to Tripura, Bengal to Maharashtra” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 26, 2024 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் குஜராத்தின் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ததால், நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்றும், ராஜ்கோட்டில் கனமழைக்குப் பிறகு தண்ணீர் தேங்கிய சாலையின் வழியாக வாகனங்கள் செல்கின்றன எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

எனவே, பரவி வரும் புகைப்படம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்டதாகும். இதை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க