YouTurn

பாஜகவிற்கு மட்டும் சென்னை மிண்ட் மணிக்கூண்டு அருகே அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பரவும் தவறான செய்தி!

பாஜகவிற்கு மட்டும் சென்னை மிண்ட் மணிக்கூண்டு அருகே அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சென்னை தங்கசாலையில் உள்ள மிண்ட் மணிக்கூண்டு அருகே இதற்கு முன்பே, பாமக தலைவர் அன்புமணி பங்கெடுத்த நிகழ்ச்சி மற்றும் சிபிஎம் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

பரவிய செய்தி

Just asking out of curiosity, @DMKITwing @U2Brutus_off @Saattaidurai @idumbaikarthi, you guys are saying  @TVKVijayHQ is shaking hands with BJP?

But how did @tnpoliceoffl grant permission for @NainarBJP to hold a public gathering right in the heart of Chennai, at Mint Clock Tower? 

Even @EPSTamilNadu is finding it difficult to get approval for a public event, yet @arivalayam government seems to be unusually friendly with the BJP. I believe there is still no clear SOP for political gatherings.

No restrictions, no hurdles, unlike what’s imposed on TVK. Don't say this is not a public place 

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கியுள்ள பிரச்சாரப் பயணத்திற்கு மட்டும் சென்னை தங்கசாலையில் உள்ள மிண்ட் மணிக்கூண்டு அருகே அரசு அனுமதி வழங்கி உள்ளது என்றும், தவெக தலைவர் விஜய்க்கு மட்டும் அவ்வளவு கட்டுப்பாடுகள் என்றும் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 


உண்மை என்ன? 

சென்னை தங்கசாலையில் உள்ள மிண்ட் மணிக்கூண்டு அருகே வேறு கட்சியினர் நிகழ்ச்சி ஏதேனும் நடந்துள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது வடபழனி கார்த்திக் என்ற பேஸ்புக் பக்கத்தில், ஆகஸ்ட் 26, 2025 அன்று வெளியான பதிவு ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை தங்கசாலையில் உள்ள அங்காளம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பாமக தொண்டர்கள் பலரும், மலர் தூவி அவரை வரவேற்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.


அதே போல் பத்திரிக்கை சுதந்திரத்தை ஆதரித்து, சிபிஎம் வடக்கு சென்னை மாவட்ட குழுவால் ஒற்றுமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்று கூறி Communist Party of India (Marxist)-ன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அக்டோபர் 12, 2023 அன்று பதிவு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் இருக்கும் புகைப்படத்தில் உள்ள பேனரில், வள்ளலார் நகர்,பேருந்துநிலையம் எதிரில் (மின்ட்) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


முடிவு: 

எனவே, சென்னை தங்கசாலையில் உள்ள மிண்ட் மணிக்கூண்டு அருகே இதற்கு முன்பே, பாமக தலைவர் அன்புமணி பங்கெடுத்த நிகழ்ச்சி மற்றும் சிபிஎம் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஆனால் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மட்டும் அனுமதி வழங்கி உள்ளது போன்று சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க