யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நரிக்குறவர்கள் குடியிருப்புக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு தேநீரும், இட்லியும் நாட்டுக்கோழி குழம்பும் விருந்தளிக்கப்பட்டது. இதனை திரித்து புறாக்கறி கொடுக்கப்பட்டதாகவும் அதனை ஸ்டாலின் புறக்கணித்ததாகவும் தவறாக பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நரிக்குறவர் வீட்டில் முதல்வர் ஸ்டாலின் உணவு உண்ணும் போது, அவர் சாப்பிடுவது புறாக்கறி என்று சொன்னவுடன், அவர் எழுந்து சென்று அதனை புறக்கணித்ததாக செய்தி ஒன்றை பரப்பி வருகின்றனர்.
புறா கறிய திண்ணதுல இருந்து சுடலை யார் வீட்டுக்கும் போறதில்ல 😓#என்றும்_மக்களுடன்_விஜய்pic.twitter.com/9WpC6UiyrD
உண்மை என்ன?
முதலமைச்சர் புறாக் கறி சாப்பிட்டாரா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது இது குறித்து ஏப்ரல் 15, 2022 அன்று ”ஆவடி நரிக்குறவர் குடியிருப்பில் தேநீர், இட்லி நாட்டுக்கோழி குழம்பு சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்” என்ற தலைப்பில் இந்து தமிழ் ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் ”திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள நரிக்குறவர்கள் குடியிருப்புக்குச் சென்று நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர், குமார் என்பவர் வீட்டில் தயாரிக்கப்பட்ட தேநீர் வழங்கப்பட்டது. மேலும், முதல்வருக்கு ஏற்கெனவே கொடுத்திருந்த வாக்குறுதியின்படி நாட்டுக்கோழி குழம்பும் இட்லியும் சமைத்து வைத்திருப்பதாகவும், அதனை முதல்வர் சாப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்று முதல்வர் ஸ்டாலின் அங்கு சாப்பிட்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் நீர்த்திரை ஊடகப் பக்கத்தில், ”நரிக்குறவர் வீட்டில் முதல்வருக்கு கறி விருந்து” என்ற தலைப்பில் முதலமைச்சர் அங்கு சென்ற வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. 4:32 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில், முதல்வர் ஸ்டாலின் நரிக்குறிவர்கள் வீட்டிற்கு சென்றது முதல், உணவருந்தியது வரை அனைத்தும் பதிவாகியிருந்தது. அதில் புறாக் கறி சாப்பிட்டதிற்கான எந்த பதிவும் இல்லை. மேலும் அந்த வீடியோவின் இறுதியில், அங்கிருக்கும் பெண்மணி புறாக்கறி என்று கூறியிருப்பார். இதனை திரித்து புறாக்கறி கொடுக்கப்பட்டதாகவும் அதனை ஸ்டாலின் புறக்கணித்ததாகவும் தவறாக பரப்பப்படுகிறது.
மேலும் APB NADU, JAYA PLUS போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
முடிவு :
நம் தேடலில், நரிக்குறவர்கள் குடியிருப்புக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு தேநீரும், இட்லியும் நாட்டுக்கோழி குழம்பும் விருந்தளிக்கப்பட்டது. மேலும் அங்கிருக்கும் பெண்மணி புறாக்கறி என்று மட்டுமே கூறியிருப்பார். இதனை திரித்து புறாக்கறி கொடுக்கப்பட்டதாகவும் அதனை ஸ்டாலின் புறக்கணித்ததாகவும் தவறாக பரப்பப்படுகிறது.
