யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2018-19 கல்வியாண்டில் GER 47-ஆக இருந்தது. 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் 2021-22 கல்வியாண்டில் இது 47-ஆக இருக்கிறது.
பரவிய செய்தி
’2018ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதம் (Gross Enrolment Ratio) 54 சதவீதமாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் இப்போது 49 சதவீதமாக குறைந்துள்ளது’ - பொன் வில்சன்
விரிவான விளக்கம்
சமீபத்தில் ’பேசு தமிழா பேசு’ யூட்யூப் தளத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அரசியல் விமர்சகர் பொன் வில்சன் என்பவர், ‘அதிமுக ஆட்சியிலிருந்த போது 2018ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio) 54 சதவீதமாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் இப்போது 49 சதவீதமாக குறைந்துவிட்டது’ என்று பேசினார்.
உண்மை என்ன?
தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் (GER) பற்றிய அதிகாரப்பூர்வ தரவுகளை இணையத்தில் தேடினோம்.
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உயர்கல்வித் துறை, 2021-22 கல்வியாண்டில் இந்திய முழுவதும் உயர்கல்வியின் நிலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பதைக் காணமுடிந்தது. அதில், 2017-18 முதல் 2021-22 வரையிலான ஐந்து கல்வியாண்டுகளில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் (GER) பற்றிய மாநில வாரியான தரவுகளை காணமுடிந்தது.

அதன்படி, 2017-18 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 46.9-ஆக இருந்தது. 2018-19 கல்வியாண்டில் 47-ஆக இருந்தது. 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் 2021-22 கல்வியாண்டில் இது 47-ஆக இருக்கிறது.
இதிலிருந்து, 2018ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 54 சதவீதமாக இருந்தது என்று கூறிவது பொய்யான தகவல் என்பது நிரூபணமாகிறது.
முடிவு:
2018-19 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 47-ஆகவே இருந்தது. இதனை மறைத்து, 54 சதவீதமாக இருந்ததாக பொன் வில்சன் பொய்யான தகவலை பரப்புகிறார்.